Chats

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன் என்று (ஷுஐப்) கூறினார்.
وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَا أَنْهَاكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
I have no desire to do what I forbid you from doing. I desire nothing but reform, as far as I can. My success lies only with God. In Him I trust, and to Him I turn.
11 Surah Hud Ayah 88

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلاَّ كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ ‏”
Narrated Abu Sa`id Al-Khudri and Abu Huraira:
The Prophet (ﷺ) said, “No fatigue, nor disease, nor sorrow, nor sadness, nor hurt, nor distress befalls a Muslim, even if it were the prick he receives from a thorn, but that Allah expiates some of his sins for that.”
Sahih al-Bukhari 5641

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா?

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா? ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால்பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்யவேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்லவேண்டும். அல்லது அவள்தனது…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் கோதுமை உணவை தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.
قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ مِنْ طَعَامِ بُرٍّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا حَتَّى قُبِضَ‏
Narrated `Aisha: The family of Muhammad had never eaten their fill of wheat bread for three successive days since they had migrated to Medina till the death of the Prophet.
Sahih al-Bukhari 6454

தமது கால்கள் வீங்கி விடும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) இரவில் நின்று வணங்குவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்பார்கள்.
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ، فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏
Narrated Al-Mughira: The Prophet (ﷺ) used to stand (in the prayer) or pray till both his feet or legs swelled. He was asked why (he offered such an unbearable prayer) and he said, “should I not be a thankful slave.”
Sahih al-Bukhari 1130

வியக்க வைக்கும் மாமனிதரின் தூய வாழ்வு (அவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும்)

*வியக்க வைக்கும் மாமனிதரின் தூய வாழ்வு* *(அவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும்)* ———————————————- நபிகள் நாயகம் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை பொய்ப்பிக்க அன்றைய மக்கத்து எதிரிகள் பல பல விமர்சனங்களை அவர் மீது முன்வைத்தனர். *பைத்தியம்* என்றனர், *பொய்…

And you are of a great moral character.(68:4)
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ قَدْ بَايَعْتُكِ ‏”‏‏.‏ كَلاَمًا وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلاَّ بِقَوْلِهِ ‏
Allah’s Messenger (ﷺ) would say to her. “I have accepted your pledge of allegiance.” “He would only say that, for, by Allah, his hand never touched, any lady during that pledge of allegiance. He did not receive their pledge except by saying, “I have accepted your pledge of allegiance for that.”
Sahih al-Bukhari 4891

மாமனிதரின் உயரிய பண்புகளில் சில… *

*மாமனிதரின் உயரிய பண்புகளில் சில… *———————————————(1) கதீஜா (ரலி) அவர்கள்: (ஹதீஸின் சுருக்கம்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள் (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள் வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள் விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள் உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் நூல்: புஹாரி…

9:113 – வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா?
சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம் எப்படி சாத்தியமாகும்?
மக்கத்து காஃபிர்களோடு, இன்றைய காலத்து இணைவைப்பாளர்களை ஒப்பிடுவது தவறா?

இஸ்லாமிய கேள்வி பதில் – 15.06.2022 பதிலளிப்பவர்:- M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) கேள்விகள்:- 9:113 – வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா? சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம்…

A man who was upright, honest and kind
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகளுக்குப் சேவகம் புரிந்தேன். அவர்கள், சீ என்றோ ஏன் (இப்படிச்) செய்தாய்?” என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா? என்றோ கூறியதில்லை.
حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ‏.‏ وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ
Narrated Anas: I served the Prophet (ﷺ) for ten years, and he never said to me, “Uf” (a minor harsh word denoting impatience) and never blamed me by saying, “Why did you do so or why didn’t you do so?”
Sahih al-Bukhari 6038

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..

*முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..* ——————————————- *எளிமையான வாழ்க்கை!* *ஏழ்மையில் பரம திருப்தி!* *எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!* *அநியாயத்திற்கு அஞ்சாமை!* *துணிவு!* *வீரம்!* *அனைவரையும் சமமாக மதித்தல்!* *மிக உயர்ந்த இடத்தில்…

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 14

தூய உள்ளம்*

*தூய உள்ளம்* *அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன* என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம்
ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர்.
‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’
என்று கேட்டனர்.
مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ‏.‏ فَقَالَ ‏‏ أَلَيْسَتْ نَفْسًا ‏
Narrated `Abdur Rahman bin Abi Laila:
A funeral procession passed in front of the Prophet (ﷺ) and he stood up. When he was told that it was the coffin of a Jew, he said,
“Is it not a living being (soul)?”
Sahih al-Bukhari 1312

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனர். பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صلى الله عليه وسلم مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ‏.‏
Narrated `Abdullah: During some of the Ghazawat of the Prophet (ﷺ) a woman was found killed. Allah’s Messenger (ﷺ) disapproved the killing of women and children.
Sahih al-Bukhari 3014

அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம்

அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம் நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே…

Prophet Muhammad (s.a.w) – A Mercy for Mankind
While we were in the mosque with Allah’s Messenger (ﷺ), a desert Arab came and stood up and began to urinate in the mosque. The Companions of Allah’s Messenger (ﷺ) said: Stop, stop, but the Messenger of Allah (ﷺ) said: Don’t interrupt him; leave him alone. They left him alone, and when he finished urinating, Allah’s Messenger (ﷺ) called him and said to him:
These mosques are not the places meant for urine and filth, but are only for the remembrance of Allah, prayer and the recitation of the Qur’an, or Allah’s Messenger said something like that. He (the narrator) said that he (the Holy Prophet) then gave orders to one of the people who brought a bucket of water and poured It over.
Anas b. Malik reported; Sahih Muslim 285

ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.
…. அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். ‘இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.
நூல்கள் : புகாரி: 220, முஸ்லிம் 429

ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள்…

இணை கற்பிக்கும் காரியங்கள்

இணை கற்பிக்கும் காரியங்கள், இறந்தவர்கள் செவியேற்பார்களா?, இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் இறந்தவர்கள் செவியேற்பார்களா? இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன்…