யார் இந்த நபித்தோழர்?

யார் இந்த நபித்தோழர்?

1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர்

2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள்.

3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர்.

  1. நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்.

5 நபியவர்களின் இரகசியத்தோழர்.

  1. பத்ருப் போரில் இவர்கள் கலந்த கொள்ளவில்லை.
  2. அகழ்ப் போர் இரவில் கடுமையான காற்றும் குளிருடன் நபிகளாருடன் இருந்தவர்கள்.

8 . உமர் (ரலி) அவர்கள் இவரையும் சவாதுல் இராக் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள்.

  1. உக்பா (ரலி) அவர்கள் தஜ்ஜால் தொடர்பான நபிமொழியை இவர்களிடம் கேட்டுள்ளார்கள்.
  2. கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்ற நபிமொழியை அறிவித்தவர்.


ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

1 ஆதாரம் புகாரி (3606)

2 ஆதாரம் புகாரி (3290)

3 ஆதாரம் புகாரி (4987)

4 ஆதாரம் புகாரி (525)

5 ஆதாரம் புகாரி (6278)

6 ஆதாரம் முஸ்லிம் (3661)

7 ஆதாரம் முஸ்லிம்(3662)

8 ஆதாரம் புகாரி (3700)

9ஆதாரம் முஸ்லிம்(4562)


ஏகத்துவம்