அறிந்து கொள்வோம்

➖➖➖➖➖➖➖➖
அறிந்து கொள்வோம்
➖➖➖➖➖➖➖➖
சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)
—————————————————-
சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?

உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)
—————————————————-
ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?

நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)
—————————————————-
ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்?

பெரும் சப்தத்தால் (அல்குர்ஆன் 11:67)
—————————————————-
உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)
—————————————————-
தம்மிடம் வந்த வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?

பொரித்தக் கன்றை கொடுத்தார்கள் (அல்குர்ஆன் 11:69)
—————————————————-
பணியாளன் எதற்கு பொறுப்பாளி?

தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். (ஆதாரம் : புகாரி 2751)
—————————————————-
வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட நபி இப்ராஹீம் (அலை) என்ன ஆனார்கள்?

பயந்துவிட்டார்கள் (அல்குர்ஆன் 11:70)
—————————————————-
தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?

ஸஅத் பின் உபாதா (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)
—————————————————-
இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள் என்ன சொன்னார்கள்?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)
—————————————————-
தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

அபூதல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)
—————————————————-
நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி என்ன கூறினார்கள்?

இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர்
கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா?

இது வியப்பான செய்திதான் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:72)
—————————————————-
நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?

பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)
—————————————————-
இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?

சகிப்புத் தன்மை மிக்கவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள் (அல்குர்ஆன் 11:75)
—————————————————-
அனஸ் (ரலி) அவர்கள், நபிகளாருக்கு பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)
—————————————————-
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம் நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?

உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா? என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 11:78)
—————————————————-
மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?

பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)
—————————————————-
லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?

சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது. (அல்குர்ஆன் 11:82)
—————————————————-
ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?

உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)
—————————————————-
ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?

மத்யன் (அல்குர்ஆன் 11:84)
—————————————————-
பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?

பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)
—————————————————-
ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர் வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?

அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)
—————————————————-
ஜிஹாத்திற்கு நிகரான நற்செயல் எது?

எதுவும் இல்லை (ஆதாரம் : புகாரி 2785)
—————————————————-
வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் எது?

பைத்துல் மஃமூர் (ஆதாரம் : புகாரி 3207)
—————————————————-
ஏகத்துவம்