Month: December 2022

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
அல்குர்ஆன் 13:25

நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது

நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு…

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்
நூல் : புகாரி 6478

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 144- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ :…

சுப்ஹானகல்லாஹும்ம- ஆரம்ப துஆ

அப்துன்னாசர் MISC: என்னுடைய பார்வையில் இந்த ஆய்வு சரியானதாகத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே சரியாகத் தெரிகிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். இதில் அறிவிப்பாளரின் குறை நிறையை மட்டும் வைத்து முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதில் மறைமுகமான இல்லத் உள்ளது. இதில்…

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம்

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை…

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.

(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.

வணக்க வழிபாடுகளில் நுழையும் செல்ஃபி மோகம்

நம்முடைய அமல்கள் இக்காரியத்தினால் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற முதல் நிலையில் இருப்பது இந்த செல்ஃபி மோகமாகத்தான் இருக்க முடியும் பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகையோ, நோன்போ, ஹஜ்/ உம்ரா போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.