யார் இந்த நபித்தோழர்?

➖➖➖➖➖➖➖➖➖
யார் இந்த நபித்தோழர்?
➖➖➖➖➖➖➖➖➖

1 நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர்.

2 இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள்

3 இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள்

4 வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள்.

5 உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி பனுஸலமா கூட்டத்தாரில் ஒருவர் குறை சொன்னபோது அவரைப் பற்றி நல்லவிதமாக நபியவர்களிடம் எடுத்துச் சொன்னவர்.

6 ஒரு மனிதர் முஸ்லிமாகி பின்னர் யஹுதியாக மாறியவரை கொல்லும் வரை நான் உட்கார மாட்டேன் என்று கூறியவர்.

7 ஒரு கூட்டத்தாரை இஸ்லாத்துக்கு அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை இவருக்கு நபியவர்கள் கூறினார்கள்.

8 அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி செய்தியை அறிவித்தவர்

9 நபியவர்கள் இவரை யமனுக்கு அனுப்பும் போது அநீதிக்குள்ளாக்கப்படவருடைய பிராத்தனைக்கு பயந்து கொள் என்ற இவரிடம் கூறினார்கள்.

10 நபி (ஸல்) அவர்கள் சில பெண்களிடம் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று உறுதிப் பிரமாணம் எடுத்தார்கள். அவர்களில் இந்த நபித்தோழரின் மனைவியும் இடம்பெற்றிருந்தார்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖
முஆத்பின்ஜபல் ரலி அவர்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖

1 ஆதாரம் புகாரி (3758)

2 ஆதாரம் புகாரி (700-701)

3 ஆதாரம் புகாரி (1458)

4 ஆதாரம் புகாரி (1458)

5 . ஆதாரம் புகாரி (4418)

6 ஆதாரம் புகாரி(4344 -4345)

7 ஆதாரம் புகாரி (1496)

8 ஆதாரம் புகாரி (7373)

9 ஆதாரம் புகாரி (2448)

10 ஆதாரம் புகாரி (1306)


ஏகத்துவம்