பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை..!

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை..!

https://eagathuvam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae/

உம்மு வரகா ரலியல்லாஹ் அன்ஹாவின் செய்தி பலஹீனமானது.

நபியவர்கள் காலத்தில் பெண்கள் இமாமத் செய்துள்ளார்கள் என்பதற்கு சிலர் உம்மு வரகா அவர்களின் பின்வரும் செய்தியை ஆதாரமாக முன்வைத்துள்ளனர்:

سنن أبي داود للسجستاني 592

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ الْحَضْرَمِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَلاَّدٍ عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بِهَذَا الْحَدِيثِ وَالأَوَّلُ أَتَمُّ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا فِى بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا. قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا

‘……….உம்மு வரகாவை அவரின் வீட்டாருக்குத் தொழுகை நடத்துமாறு நபியவர்கள் ஏவினார்கள். அவருக்கு அதான் சொல்பவர் ஒருவரும் இருந்தார். ………” (அபுதாவூத்:111)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் வலீத் எனும் அறிவிப்பாளரின் ஆசிரியர்களாக இடம் பெறும் அவரது பெயர் குறிப்பிடப்படாத பாட்டியாரும் அப்துர் ரஹ்மான் இப்னு கல்லாத் என்பவரும் யாரென்று அறியப்படாதவர்கள்.இந்த ஹதீஸை பல அறிஞர்கள் இதன் காரணமாக பலஹீனப்படுத்தியுள்ளனர். ஆகையால் இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. அதே நேரம் இந்த ஹதீஸை ஒரு வாதத்திற்காக பலமானது என வைத்துக் கொண்டாலும் இதில் முஅத்தினாக ஒரு ஆண் இருந்துள்ளார். அப்படியாயின் அவருக்கும் சேர்த்தே இமாமத் செய்திருக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதை எந்த அறிஞரும் ஏற்கவில்லை. எனவே இது பலமானதாக செய்தியாக இருந்தால் கூட இக்கட்டான சூழ் நிலைக்குறியது என்றே புரிய வேண்டும். எனவே நபியவர்கள் காலத்தில் பெண்கள் இமாமத் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.

3.ஆயிசா மற்றும் உம்மு ஸலமா (ரழியல்லாஹ் அன்ஹ{மா) அவர்களின் இமாமத் பற்றிய அறிவிப்பு பலஹீனமானது.

நபியவர்கள் காலத்திற்கு பின் ஆயிசா ரழியல்லாஹ் அன்ஹா இமாமத் செய்ததாக இரு செய்திகள் பின்வருமாறு இடம்பெறுகின்றன:

முதல் செய்தி:

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (1 – 280)
731 – حدثنا أبو العباس محمد بن يعقوب الأصم ثنا أحمد بن عبد الجبار العطاردي ثنا عبد الله بن إدريس عن ليث عن عطاء عن عائشة : أنها كانت تؤذن و تقيم و تؤم النساء و تقوم وسطهن

‘ஆயிசா அவர்கள் அதான் சொல்பவர்களாகவும் இகாமத் சொல்பவர்களாகவும் பெண்களுக்கு இமாமத் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அவ்வாறு இமாமத் செய்யும் போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்”
(ஹாகிம்:731)

இச்செய்தி பலஹீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் லைஸ் பலஹீனமானவர். இதே செய்தி வேறொரு அறிவிப்பாளர் வரிசை மூலம் முஸன்னப் இப்னு அபீஷைபாவில்-4884 இடம்பெறுகிறது. அவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் இப்னு அபிலைலா என்பவர் மனனத்தில் மிக பலஹீனமானவர். எனவே இச்செய்தியை ஆதாரமாக வைக்க முடியாது.

இரண்டாவது செய்தி:

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي –
5561- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ : مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَيْسَرَةَ أَبِى حَازِمٍ عَنْ رَائِطَةَ الْحَنَفِيَّةِ : أَنَّ عَائِشَةَ أَمَّتْ نِسْوَةً فِى الْمَكْتُوبَةِ فَأَمَّتْهُنَّ بَيْنَهُنَّ وَسَطًا

ஆயிசா அவர்கள் ஒரு பர்ளுத் தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் நின்று தொழுவித்தார்கள்”(பைஹகீ-5561) இந்தச் செய்தியை அறிவிக்கும் ராஇதா என்ற பெண்மணி யாரென்றே அறியப்படாதவர்.

அதே போன்று உம்மு ஸலமா ரலியல்லாஹ் அன்ஹா அவர்கள் இமாமத் செய்ததாகவும் ஒரு செய்தி பின்வருமாறு இடம்பெறுகிறது:

المصنف لإبن أبي شيبه – (1 – 497)
حدثنا أبو بكر قال حدثنا سفيان بن عيينة عن عمار الذهني عن امرأة من قومه اسمها حجيرة قالت أمتنا أم سلمة قائمة وسط النساء .

‘பெண்களாகிய எங்களுக்கு நடுவில் நின்று உம்மு ஸலமா அவர்கள் எங்களுக்கு தொழுவித்தார்கள்” (இப்னு அபீஷைபா-1:497)

இதை அறிவிக்கும் ஹ{ஜைரா என்ற பெண்மணி யாரென்றே அறியப்படாதவர். இதே செய்தி இன்னொரு அறிவிப்பாளர் வரிசை மூலம் மேற் குறிப்பிட்ட கிரந்தத்தில் இதற்கடுத்ததாக இடம்பெறுகிறது. அதில் உம்முல் ஹஸன் கைரா இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இச்செய்தியும் பலஹீனமடைகிறது.

இவைகள் பலமானவைகள் என வைத்தாலும் இது ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா மற்றும் உம்மு ஸலமா அவர்களின் இஜ்திகாதாக இருக்கலாம். நபியவர்களின் அங்கீகாரம் இதற்கு இருப்பதாக அவர்கள் இந்த அறிவிப்புகளில் எங்கும் சொல்லவில்லை. எனவே இவைகளை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

بدعة பித்அத்