Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா ?

ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா ? ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த…

அடக்கஸ்த் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

அடக்கஸ்த் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல் ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். ‘எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது…

வெளியூரில் இறந்தவருக்காக (காயிப் . ஜனாஸா) தொழுகை நடத்துதல்

வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று…

ஜனாஸா தொழுகையை குழந்தை பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த

ஜனாஸா தொழுகையை பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதீ 952, நஸயீ 1917, இப்னு…

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள்…

பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா ?

பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை….. இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம். கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)…

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும். ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர்…

சொர்க்கத்தில் மாளிகையை பெற்றுத்தரும் 12 ரக்அத்கள் எவை?

சொர்க்கத்தில் மாளிகையை பெற்றுத்தரும் 12 ரக்அத்கள் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் நபிகளார்…

முன் & பின் சுன்னத்கள் யாவை

முன் பின் சுன்னத்கள் யாவை? தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும். பஜ்ருடைய சுன்னத் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல்…

நோயாளியின் தொழுகை

நோயாளியின் தொழுகை சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம். எனக்கு மூல நோய் இருந்தது. ‘எவ்வாறு…

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால்…

ஜமாஅத் தொழுகையில் பேண வேண்டிய ஒழுங்குகள்

ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர்களும்,பெரியவர்களும், அதற்கடுத்து சிறியவர்களும், கடைசி வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும். என் பாட்டி முளைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள்.…

கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை)

கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை) கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும். ‘தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),…

களாத் தொழுகை உண்டா❓

களாத் தொழுகை ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதைக் களாத் தொழுகை என்றும்…

ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தா)

ஸஜ்தா ஸஹ்வு தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும். முதல் இருப்பை விட்டு விட்டால்… நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள்.…

தொழுகையில் இறுதியாக ஸலாம் கூறி முடித்தல்

ஸலாம் கூறி முடித்தல் இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும். வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம்…

அத்தஹியாத்து இருப்பில் ஓதும் கடைசி துஆக்கள்

இருப்பில் ஓதும் துஆக்கள் ‘உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்’ என்று நபி…

மூன்றாம் ரக்அத் & நான்காம் ரக்அத்

மூன்றாம் ரக்அத் இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சூரத்துல் பாத்திஹா…

முதல் இருப்பில் ஓத வேண்டியவை & அத்தஹியாத்து துஆ

முதல் இருப்பில் ஓத வேண்டியவை & அத்தஹியாத்து துஆ முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்…

விரலசைத்தல், அத்தஹியாத்தில் விரலசைப்பது பற்றி

விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி, அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் அமர்வில்…