Chats

(ஏக இறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?
[அல்குர்ஆன் 73:17]

இக்குழந்தை பிறந்திருந்தாலும். இக்குழந்தையின் செய்தியை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் இணைத்து தவறான விளக்கம் தரக்கூடிய பொருத்தமற்ற பதிவாக உள்ளது. மேலும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொருத்தமற்ற பதிவு மட்டுமல்ல இதை பகிர்வதன்…

தூய்மை பற்றி இஸ்லாம்

தூய்மை பற்றி இஸ்லாம் இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக…

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா? பிறந்த நாளின் ஆதி தோன்றல் எங்கிருந்து துவங்கியது, அதன் வரலாறு என்ன என்பது குறித்து விக்கிபீடியா முதற்கொண்டு பல்வேறு authentic இணையதளங்கள் என்ன சொல்கிறது என்பதை சம்மந்தப்பட்ட நபரும் அவரை ஆதரிக்கும் சகோதரர்களும்…

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? ✅ உண்ணலாம் பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் கதிர் விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்து தான் நமக்கு அரிசியாகக் கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா?…

உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்கு மிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 60:7)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையானது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்ட தாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
அல்குர்ஆன் 13:25

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்
நூல் : புகாரி 6478

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 144- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ :…

சுப்ஹானகல்லாஹும்ம- ஆரம்ப துஆ

அப்துன்னாசர் MISC: என்னுடைய பார்வையில் இந்த ஆய்வு சரியானதாகத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே சரியாகத் தெரிகிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். இதில் அறிவிப்பாளரின் குறை நிறையை மட்டும் வைத்து முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதில் மறைமுகமான இல்லத் உள்ளது. இதில்…

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம்

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை…

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.

(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.