மரணத்திற்கு பின்பும் சமூக அக்கறைகொண்ட நல்லடியார்

இறைவன் தன் வேதத்தில் ஒரு ஊராரிடத்தில் மூன்று தூதர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியதையும், அவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்த நிலையில் ஒருவர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து இறைவனை நம்பிக்கை கொண்டதையும், அவரை அக்கூட்டத்தார் கொலை செய்த காரணத்தால் அவருக்கு இறைவன் வழங்கும் பரிசுகளைப் பற்றியும், அவர் தன் மரணத்திற்குப் பின்னால் தன் சமூகத்தார் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாட்டையும், யாஸீன் என்ற அத்தியாயத்தில் படம்பிடித்துக் காட்டுகிறான். அதை பாருங்கள்.

அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து “என் சமுதாயமே! தூதர்களை பின்பற்றுங்கள்! உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள் என்னை படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே திரும்ப நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்கு செவிசாயுங்கள்” என்று கூறினார்.

“சொர்க்கத்திற்கு செல்” என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர், “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமூதாயத்தினர் அறிந்து கொள்ளக்கூடாதா?” என்றார்.

அல்குர்ஆன் 36:20-27

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed