*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 239* ||

அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(91~141)
__________________________________
1 ) இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளிடம் என்ன பேசினார்கள்?

அதனைக் கண்ட இணைவைப்பாளர்களிடம் இப்ராஹீம் நபி என்ன கூறினார்கள்?

இப்ராஹீம் நபி சிலைகளிடம் பேசியது: *நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?* என்று கேட்டார்.

சிலைகளை வணங்கியவர்களிடம் இப்ராஹீம் நபி கூறியது:

*(செயலிழந்த) நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்* என்று கூறினார்.

(37:91-92, 37:95-96)
__________________________________
2 ) நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனிடம் என்ன கனவு கண்டதாக கூறினார்கள்? அதற்கான அவர் மகனின் பதில் என்னவாக இருந்தது?

நபி இப்ராஹிம் (அலை) அவர்கள், *என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன்* என்று கூறினார்கள் (37:102). அதற்கு மகன், *என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்* என்று பதிலளித்தார் (37:102).
__________________________________
3 ) நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எப்படியான நற்செய்தி வழங்கினான்?

அல்லாஹ் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு *பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினான்* (37:101).
__________________________________
4 ) ஸலாமுன் அலா இப்ராஹீம் என்றால் என்ன?

ஸலாமுன் அலா இப்ராஹீம் என்பதற்கு *இப்ராஹீமின் மீது அமைதி உண்டாகட்டும்!* என்று பொருள் (37:109)
__________________________________
5 ) கொடுக்கப்பட்ட பத்து வசனங்களில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளது அந்த அந்த நபிமார்களின் பெயர்கள் என்னென்ன?

இந்த பத்து வசனங்களில் நான்கு நபிமார்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* இஸ்ஹாக் (37:112, 37:113)
* மூஸா (37:114, 37:120)
* ஹாரூன் (37:114, 37:120)
__________________________________
6 ) பொருள் அறிவோம்: بَـٰرَك, ذُرِّيَّتِ

* بَـٰرَكْنَا (பாரக்னா): நாம் அருள்வளம் புரிந்தோம் / பரக்கத் செய்தோம் (37:113)

* ذُرِّيَّةِ (துர்ரிய்யத்): சந்ததி / தலைமுறை (37:113)
__________________________________
7 ) இல்யாஸ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம் என்ன கூறினார்கள்?

இல்யாஸ் (அலை) தமது சமுதாயத்தாரிடம், *நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? உங்கள் இறைவனும், முன்பிருந்த உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அழகிய படைப்பாளன் அல்லாஹ்வையன்றி, ‘பஅல்’ எனும் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா*?” என்று கேட்டார். (37:124-126)
__________________________________
8 ) யாரைத் தவிர்த்து விட்டு மற்றவர்களை நரகத்தில் போடுவதாக அல்லாஹ் கூறுகிறான்?

*தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர*, மற்றவர்கள் நரகத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள். (37:127-128)
__________________________________
9 ) குறிப்பிட்ட இந்த 11 வசனங்களில் இடம்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்களை குறிப்பிடுக :

லூத் (37:133), யூனுஸ் (37:139).
__________________________________
10 ) யாரையெல்லாம் காப்பாற்றி விட்டு மற்றவர்களை அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

(*வேதனையில்) தங்கிவிட்ட கிழவியைத் தவிர*, லூத்தையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிவிட்டு, பின்னர் *மற்றவர்களை அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்* (37:134-136).
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *