அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 180* ||

அத்தியாயம் 22 *அல்ஹஜ்* – ஹஜ் எனும் வணக்கம் வசனங்கள் (71~80) வரை
______________________________
1 ) மனிதர்களுக்கு *அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்துக்காட்டாக* என்ன கூறுகின்றனர்?

மனிதர்களே! ஓர் எடுத்துக்காட்டு கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் *ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது*.

அவர்களிடமிருந்து *அந்த ஈ எதையேனும் பறித்துச் சென்றால், அதனை அவர்களால் ஈயிடமிருந்து விடுவிக்கவும் முடியாது*. அழைப்பவனும், அழைக்கப்படுபவனும் பலவீனமாக உள்ளனர் (22:73)

*என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்*? அவர்கள் *ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும்* என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்.

அபூஹுரைரா (ரலி), புகாரி (5953), முஸ்லிம் (4292)
______________________________
2 ) *எதில் வெற்றி இருக்கிறது?*

இறைநம்பிக்கை கொண்டோரே! *ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தா செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மை செய்யுங்கள்*! இதனால் வெற்றியடைவீர்கள் (22:77)
______________________________
3 ) *அறியாமைக் கால அழைப்பை எவன் அழைக்கின்றானோ* அவருக்கு என்ன கிடைக்கும் ?

*அறியாமைக் கால அழைப்பை எவன் அழைக்கின்றானோ அவன் நரகத்திற்குரியோரில் ஒருவனாவான்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது *அவன் நோன்பு நோற்றவனாகவும், தொழுபவனாகவும் இருந்தாலுமா?* என்று ஒரு மனிதர் கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் *ஆம்* என்று பதிலளித்துவிட்டு, *அல்லாஹ்வின் அடிமைகளான இறைநம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் என்று உங்களுக்குப் பெயரிட்டானே அந்த அல்லாஹ்வின் அழைப்பைக் கொண்டு அழையுங்கள்* என்று கூறினார்கள்

அல்ஹாரிஸ் அல்அஷ்ரீ (ரலி),
நஸாயீ – குப்ரா (8866), முஸ்னத் அபீயஃலா (1571)
______________________________

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *