*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 09* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனங்கள் *100-110* வரை)]

A) *ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக* ஆவதற்குரிய வழிமுறை என்ன?

B) وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ *அந்நாளில் இவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம் என்ன?*

C) பின் வசனத்திற்கு விளக்கமளிக்கவும்…

அனைவரும் *அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!* (3:103)

_________________________

A) *நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற சமுதாயமாக இருத்தல் வேண்டும்.*

*நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்* (3:104)

நீங்கள், *மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கிறீர்கள்*. (3:110)

_________________________

B) அவர்கள் *சொர்க்கத்தை பரிசாக பெற்று அல்லாஹ்வின் அருளில்  நிலைத்திருப்பார்கள்.*

*வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள்*. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (3:107)

_________________________

C) *திருக்குர்ஆனும், அதன் விளக்கவுரையான நபிவழியும்*

………*நீங்கள் அனைவரும் (குர்ஆனாகிய) அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும், பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான்*. (முஸ்லிம் 3533)

      கவனத்தில் கொள்ளுங்கள்! *நான் உங்களிடையே கனமான இரண்டு (அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள்) பொருட்களை விட்டுச் செல்கிறேன்*. அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதுவே அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 4782)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *