*பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிவோம்*

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

*அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை*.

நூல்: புகாரி 1496

*அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை* என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

நூல்: புகாரி 2448

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*அநீதி, மறுமை நாளின் பல இருள்களாக காட்சி தரும்.*

நூல்: புகாரி 2447

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.*

நூல்: முஸ்லிம் 5034

மறுமையின் இருள் என்பது நாம் மீளவே முடியாத அளவுக்குப் படுபயங்கரமான பாதிப்பை ஏற்ப்படுத்துகின்ற இழிவு தரும் இருளாகும். அந்த இழிவிலிருந்தும், இருளிலிருந்தும் நாம் தப்பிக்க வேண்டுமானால் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

*அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.*

அல்குர்ஆன் 3:57

அத்தகையவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்குப் பயந்து திருந்தி வாழ வேண்டும். அதற்கு வல்ல இறைவன் உதவி செய்வானாக!!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *