________________________________
*யார் இந்த யூதர்கள்?*
________________________________
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு மனைவிமார்கள்.
(1) *ஸாரா* – அவர்களின் மகன் *இஸ்ஹாக்* (அலை) அவரின் மகன் -*யஃகூப்* (அலை) இவரில் இருந்து உருவான சந்ததியினரே *பனூ இஸ்ராயில்கள்*.
இஸ்ஹாக் அலை, அவர்களின் மகன் யஃகூப் (அலை),
அவர்களின் மகன் யூஸுப் (அலை),
மூஸா (அலை),
ஹாரூன் (அலை),
யூஷஃ (அலை),
தாவூத் (அலை),
சுலைமான் (அலை),
ஈஸா (அலை),
ஸகரிய்யா (அலை),
யஹ்யா (அலை)
அதிகமான இறைத்தூதர்களை *பனூஇஸ்ராயீல்களில் இருந்தே அல்லாஹ் அனுப்பினான்*.
2 ) *ஹாஜர்* (அலை) – அவர்களின் மகன் இஸ்மயீல் (அலை) அவர்களின் மூலம் இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்களைத் தவிர எந்த நபியும் வரவில்லை.
இவர்கள் மதீனாவில் பிரச்சாரம் செய்தார்கள்
அவர்கள் அனைவரும் இஸ்லாத்தையே சிறந்த வாழ்க்கை நெறியாகப் பிரச்சாரம் செய்தார்கள்.
*அல்லாஹ் பல அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கி இருந்தான்.*
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த *அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்*!
(2:47)
என் சமுதாயமே! *உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததின் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்*!” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
(5:20)
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். *மன்னு, ஸல்வா(எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம்*.
(2:57)
ஆனால் அவர்களோ வரம்பு மீறி இறைத்தூதர்களையே கொலை செய்தார்ககள்.
ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்தார்கள்.
நபி ஈஸா (அலை) விபச்சாரத்தில் பிறந்தவர் எனக் கூறி அவர்களை சிலுவையில் அறைய முயற்சித்தார்கள்.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறினார்கள்.
யூதர்கள் உஸைர் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
அவர்களின் மத குருமார்கள் வேதத்தைத் தங்கள் சுய விருப்பப்படி மாற்றியமைத்து பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இட்டுக்கட்டினார்கள்.
இறைத்தூதர்களில் சிலரை ஏற்று சிலரை மறுத்தார்கள்.
*யூதர்கள்:* ஈஸா (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) , முஹம்மத் (ஸல்) ஆகியோரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.
*கிறிஸ்தவர்கள்*: முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரையும் நபியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
*முஸ்லிம்களாகிய நாம்*:
அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம். (2:285)
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
(அல்குர்ஆன்: 2:4)
____________________
ஏகத்துவம்