கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)

கேள்வி : உடலிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?

பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)

கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?

பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)

கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?

பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)

கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?

பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)

கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?

பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)

கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?

பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)

கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2997)

கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?

பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)

கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?

பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)
———————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed