பகைவர்களையும் நண்பர்களாக்கிட…

பிறரால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதும், நம்மைப் பிறர் பகைத்து வெறுப்புக் காட்டும் போதும் அவர்களிடம் பதிலுக்குப் பதில் வெறுப்பைக் காட்டாமல் பகைமை வளர்த்துக் கொள்ளாமல், நமக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே நாட வேண்டும். நல்லதையே பேச வேண்டும். அவர்களது தவறுகளை மறந்து, மன்னித்து, அலட்சியம் செய்து நட்புறவோடு பழக வேண்டும்.

மறதி என்பது மனிதனின் இயல்பான குணநலன்களில் ஒன்றாக உள்ளது. வாழ்வில் முக்கியமான பல விஷயங்களை மறந்து விடும் நாம், நமது உறவுகளாலும் நட்பு வட்டாரத்தாலும் ஏற்படும் பாதிப்பை மட்டும் காலம் காலமாக மறந்து விட மறுக்கிறோம்.

பிறரால் ஏற்படும் தீமைகளை சகித்துக் கொண்டு, அவற்றை அலட்சியம் செய்யும் பண்பை நாம் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பின் மூலம் பகைமை, விரோதம், குரோதம் போன்றவற்றை அழித்துவிட முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:34, 35

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *