*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 97* ||
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 81- 90 வரை]*
1) இந்த பத்து வசனங்களிலும் *முனாபிஃக்களுக்கு எச்சரிக்கையாக அல்லாஹ் கூறும் வரிகளை* மட்டும் எழுதவும்.
தபூக் போருக்குச் செல்லாமல் பின்தங்கிய முனாபிஃக்களுக்கு அல்லாஹ் கூறிய எச்சரிக்கை வரிகள்:
1. (9:81) *“நரக நெருப்பு இதைவிடக் கடும் வெப்பமானது” என்று கூறுவீராக!
2. (9:82) *அவர்கள் குறைவாக சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்!”
3. (9:83) *என்னுடன் ஒருபோதும் நீங்கள் புறப்படவே வேண்டாம்“, என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போரிட வேண்டாம்.*
4. (9:84) *அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தாதீர், பாவிகளாகவே மரணிக்கட்டும்”
5. (9:85) *அவர்களின் செல்வங்களும் பிள்ளைகளும் உம்மை வியப்பில் ஆழ்த்த வேண்டாம்”
6. (9:87) *அவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது”
7. (9:90) *இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்”
2) “உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்.” என்ற நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறிய கூற்றுக்கு ஏற்ப அல்லாஹ் இறக்கிய குர்ஆன் வசனம் எது?
(9:84) *முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை வைப்பது சம்பந்தமாக*
நூல்கள்: புகாரி (1366), திர்மிதீ (3022), நஸாயீ (1940), அஹ்மத் (91)
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*