அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 189* ||

அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (111~118) வரை

நேற்றைய கேள்விகளுக்கான பதில்கள் பின்வருமாறு:
___________________________
1 ) மேற்கொண்ட வசனங்களில் இடம்பெறும் *பிரார்த்தனைகளை* எழுதுக?

رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

*என் இறைவனே! மன்னிப்பாயாக! கருணை புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்* (23 :118)
_____________________________
2 ) *இறைமறுப்பாளர்கள் ஏன் வெற்றி பெற மாட்டார்கள்?*

*அல்லாஹ்வுடன் இணைத்து வேறு கடவுளை பிரார்த்திக்கிறார்கள், அவர்களிடம் அதுபற்றி எந்த ஆதாரமும் இல்லை.* (23:117)

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை இணைத்து வணங்குபவர்களிடம் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை,

*இணைவைப்பவர்களின் செயல்கள் அடிப்படையற்றவை*

*ஆதாரமற்ற நம்பிக்கை மற்றும் வணக்கமுறைகள் மறுமையில் தோல்விக்கே வழிவகுக்கும்* என்பது இதன் பொருள்
_____________________________
3 ) வெற்றியாளர்கள் (*الْفَآئِزُونَ*) என குறிப்பிடப்படுபவர்கள் யார்? அவர்கள் எதற்காக வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது?

வெற்றியாளர்கள் (*الْفَآئِزُونَ*) என குறிப்பிடப்படுபவர்கள் *பொறுமையை மேற்கொண்ட இறை நம்பிக்கையாளர்கள்* ஆவர் (23:111).

அவர்கள் *இம்மை வாழ்வில் சோதனைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கி, இறைவழியில் உறுதியாக நின்றதால் மறுமையில் இறைவனிடமிருந்து கூலி (பலன்) பெற்று வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.*
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *