அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 187* ||

அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (91~100) வரை
______________________________
1 ) *ஆவி, பேய், பிசாசு இல்லை, மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள், மரணித்தவருக்கு ஆற்றல் இல்லை* என்பதையும் *ஒருவர் மரணித்து விட்டால்* அவருக்கும், *இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்புமில்லை* என்பதையும் உறுதிப்படுத்தும் வசனம் எது?

அவர்கள் (*மரனித்தவர்கள்) உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை (وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ ) அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது*. (23:100)
_______________________________
2 ) மேற்கொண்ட வசனங்களில் இடம்பெறும் *பிரார்த்தனைகளை* எழுதுக?

‎رَّبِّ إِمَّا تُرِيَنِّى مَا يُوعَدُونَ⭘ رَبِّ فَلَا تَجْعَلْنِى فِى ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ⭘

*என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்படுவதை (வேதனையை) நீ எனக்குக் காட்டுவதாக இருந்தால், என் இறைவனே! அந்த அநியாயக்காரக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடாதே!* (23:93,94)

‎وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ⭘ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ⭘

*என் இறைவனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இறைவனே! அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்* (23:97,98)

‎رَبِّ ٱرْجِعُونِ⭘ لَعَلِّىٓ أَعْمَلُ صَـٰلِحًۭا فِيمَا تَرَكْتُ

*\\பயனளிக்காத துஆ…\\*

*என் இறைவனே! நான் விட்டு விட்டதில் நற்செயலைச் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்*! (23:100)
______________________________
3 ) இந்த வசனம் ( 23:91) எதை நிரூபிக்கிறது?

\\*பல கடவுள்கள் இருக்க முடியாது என்பதை நிறுபிக்கிறது*\\

இந்த வசனம், *அல்லாஹ்விற்கு பிள்ளை இல்லை என்றும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை* என்றும் தெளிவாக கூறுகிறது.

ஏனெனில், *பல கடவுள்கள் இருந்திருந்தால், ஒவ்வொருவரும் தாங்கள் படைத்தவற்றை தனித்தனியாகக் கொண்டு செல்வார்கள்*;

மேலும் *அவர்களில் ஒருவர் மற்றவர்களை விட மேலோங்க முயற்சிப்பார்கள்*.

இது உலகில் குழப்பம் ஏற்படுத்தும். எனவே, இந்த வசனம் *அல்லாஹ் ஒரே கடவுள் என்றும், அவன் *எல்லா பலவீனத்தைவீட்டும் தூயவன்* என்றும் நிரூபிக்கிறது.
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *