அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 186* ||

அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (81~90) வரை
______________________________
1 ) மக்கள் எதை *முன்னோரின் கட்டுக்கதைகள் (أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ)* என்று கூறுகிறார்கள்?

*மரணித்த பின்பு மீண்டும் உயிர்பித்து எழுப்பப்படுவதை*

மக்கள், இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பிறகு *மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோம்* என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை *முன்னோரின் கட்டுக்கதைகள் (أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ)* என்று கூறுகிறார்கள்
______________________________
2 ) அல்லாஹ் எவ்வாறு *மனிதர்களுடன் தர்க்க ரீதியாக உரையாடுகிறான்*?

அல்லாஹ், தூதரை மறுப்பவர்களிடம் *மூன்று அடிப்படை கேள்விகளை* கேட்குமாறு கூறுகிறான்…

*பூமி மற்றும் அதிலுள்ள அனைத்தும் யாருடையது*? (22:84),

*ஏழு வானங்களும் அர்ஷும் யாருடையது*? (23: 86),

*அனைத்து பொருட்களின் அதிகாரமும் யாரிடம் உள்ளது*? (23: 88).

ஒவ்வொரு கேள்விக்கும் பின் அவர்களே *அல்லாஹ்வுக்கே உரியவை* (سَيَقُولُونَ لِلَّهِ) என்று பதிலளிகின்றர்கள்.

அவர்கள் *அல்லாஹ்வின் படைப்பாற்றலை* ஏற்றுக்கொள்கிறார்கள்,

ஆனால் *அதே அல்லாஹ்வால் மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்க முடியும்* என்பதை *மன முரடால் மறுக்கிறார்கள்*.

இவ்வாறு தர்க்க ரீதியாக மனிதர்களிடம் உரையாடி அவர்களின் *பலவீனமான நம்பிக்கையையும் அவர்கள் பொய்யார்கள் என்பதையும் நிரூபிக்கின்றான்*
______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *