அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 185* ||

அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (62~80) வரை

1 ) *உண்மையைப் பேசக் கூடிய பதிவேட்டின்* (كتاب ينطق بالحق) தன்மை என்ன?

இது அல்லாஹ்விடம் இருக்கும் பதிவேடாகும். அதில் மனிதர்களின் *அனைத்து செயல்களும், எண்ணங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகின்றது*.

இதன் மூலம் *மறுமை நாளில் பரிபூரண நீதி நிலைநாட்டப்படும் என்பதையும், யாரும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்* என்பதையும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.

*நம்மிடம் உண்மையைப் பேசக் கூடிய ஒரு பதிவேடு உள்ளது*. (23:62)

கூடுதல் வசனங்கள்…

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! *இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!* எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (18:49)

*இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம்* என்று கூறப்படும். (45:29)
_____________________________
2) *அம்மக்கள் குர்ஆனை ஏற்காமல் இருப்பதற்கான* காரணங்கள் என்ன?

அவர்களின் *உள்ளங்கள் அலட்சியமாக* இருந்தவை (23:63)

வேறு *தீய செயல்களில்* ஈடுபப்பட்டு வந்தவை (23:63)

*வேத வரிகளை மறுத்து ஆணவம்* கொண்டிருந்தவை (23:66)

*இரவு நேரங்களில் குர்ஆனைப் பற்றி வீணான பேச்சுக்களில்* ஈடுபட்டவை (23:67)
_____________________________
3 ) மேற்குரிய *ஒன்பது வசனங்களின் முக்கிய போதனைகளை* எழுதுக?

*அல்லாஹ் மனித சக்திக்கு ஏற்ற கடமைகளையே விதித்துள்ளான்* (23:62)

*ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது* (23:62)

*உண்மையை நிராகரிப்பவர்களுக்கு தண்டனை* உண்டு (23:64)

*தண்டனை வரும்போது அபயக்குரல் எழுப்புவது பயனளிக்காது* (23:64)

*தூதர் உண்மையைக் கொண்டு வந்தும், பெரும்பாலோர் அதை வெறுத்து வந்தவை* (23:70)
________________________________
4 ) *இறைவனுக்கே உரிய முக்கிய அதிகாரங்கள்* எவை?

*உயிர்ப்பித்தல், மரணிக்க வைத்தல், இரவு-பகல் மாற்றங்களை நிகழ்த்துதது* (23: 80).
________________________________
5 ) *மக்கள் துன்பத்தில் இருக்கும்போது இறைவனிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்*?

*நிராசையடைகிறார்கள்* (23:77)

அவர்கள் தமது *இறைவனுக்குப் பணியவில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை* (23: 76).
________________________________
6 ) *இறுதியில் மனிதர்கள் எங்கு திரும்புவார்கள்*?

*அல்லாஹ்விடமே* ஒன்று சேர்க்கப்படுவார்கள் (22: 79).
________________________________
7 ) அல்லாஹுவின் அருட்கொடைகளை பற்றி பேசும் வசனம் எது?

அல்லாஹ் மனிதர்களுக்கு *செவி, பார்வை, உள்ளம்* ஆகியவற்றை (*அருட்கொடையாக) வழங்கியுள்ளான்* (23:78)

*மனிதர்களுக்கு வாழ்வாதரம்* வழங்குதது (23:72)

*மனிதர்கள் மீது கருணை* காட்டுதது (23:75)
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *