அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 184* ||

அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (41~61) வரை

1 ) *ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய தகவல்* என்ன?

*ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய தகவல்…*
ஈஸா (அலை) மற்றும் அவரது தாயார் மர்யம் (ரலி) ஆகியோரை *அல்லாஹ் சான்றாக ஆக்கினான். அவர்களை நிம்மதியும் நீரூற்றும் மிக்க உயரமான இடத்தில் தங்க வைத்தான்*. (23:50)
_________________________________
2 ) *தூதர்களை மறுத்ததற்காக அல்லாஹ் என்ன செய்தான்*?
தூதர்களை மறுத்தவர்களை *அல்லாஹ் அழித்தான்*. அநியாயக்காரர்களை கூளங்களாக ஆக்கினான் (23:41).

அவர்களை *ஒருவரையொருவர் அழிவில் பின்தொடரச் செய்து*, வெறும் செய்திகளாக ஆக்கினான் (23:44).

மூஸா மற்றும் ஹாரூனை (அலை) *பொய்யரென மறுத்ததால் அவர்களும் அழிக்கப்பட்டனர்* (23:48).
_________________________________
3 ) *மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) பிரச்சாரம் செய்யும் போது* என்ன நேர்ந்தது?
மூஸா மற்றும் ஹாரூன் (அலை) ஆகியோரை அல்லாஹ் சான்றுகளுடனும் தெளிவான ஆதாரங்களுடனும் ஃபிர்அவ்னிடமும் அவனது பிரமுகர்களிடமும் அனுப்பினான். ஆனால், அவர்கள் கர்வம் கொண்டு ஆணவமாக நடந்து, “*நம்மைப் போன்ற இரு மனிதர்களை நம்புவோமா?*” எனக் கூறி, *அவ்விருவரையும் பொய்யரென மறுத்தனர்*. இதனால், *அவர்கள் அழிக்கப்பட்டோரில் ஆகிவிட்டனர்*. (23:45-48)
_________________________________
4 ) *உள்ளங்கள் நடுங்குவோரின் பண்புகள் யாவை?*

*நன்மை செய்வதில் முந்துகிறவர்கள்* (23:61)

*தமது இறைவனுக்கு இணைவைக்காதவர்கள்*, (23:59)

அவர்கள் *நோன்பு நோற்பார்கள், தொழுவார்கள், தர்மம் செய்வார்கள்*

*தமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ* என்று அஞ்சுவார்கள்.

(திர்மிதீ 3099, இப்னு மாஜா 4188)
_________________________________
5 ) *துஆவின் நிபந்தனைகள்* என்னென்ன?

துஆ ஏற்கப்படுவதற்குத் தடையாக உள்ளவை ஹராமான வாழ்க்கை முறை.

*ஒருவருடைய உணவும், பானமும், உடையும் தடை செய்ய பட்டதாக இருந்தால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படாது.*

[உமர் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதீ – 2915, முஸ்லிம் – 1844, அஹ்மத் – 7998]
_________________________________
6 ) *இம்மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்களைக் என்ன?*

மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவம் *ஒரே மார்க்கம், ஒரே இறைவன் என்பதும், அந்த இறைவனுக்கே அஞ்சி வாழ வேண்டும் என்பதுமாகும்.*

இதுவே உங்கள் மார்க்கம்; *ஒரே மார்க்கம். நானே உங்கள் இறைவன்*. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” (23:52)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *