அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 183* ||
அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (21~40) வரை
_______________________________
1 ) *எதில் படிப்பினை இருக்கிறது*?
*கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம்) படிப்பினை* இருக்கிறது. (23:21)
_______________________________
2 ) *அல்லாஹ் யாரை தூதராக இறக்கியிருப்பான்*?
நிராகரிப்பாளர்கள் கூறுகையில், அல்லாஹ் நாடியிருந்தால் *வானவர்களை (மலக்குகளை) தூதராக இறக்கியிருப்பான்* என்று கூறினர். (23:24)
_______________________________
3 ) நூஹ் நபி அவர்களுக்கு கற்றுக்கொடுத்த *பிரார்தனைகள்* என்ன?
*என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவதால் எனக்கு உதவுவாயாக*!” (23:26)
*என் இறைவனே! பாக்கியமிக்க இடத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! (பாதுகாப்பாக) இறக்கி வைப்போரில் நீயே மிகச் சிறந்தவன்*” (23:29)
_______________________________
4 ) *மறுமையைப் பற்றி என்ன நம்பிக்கை கொண்டிருந்தனர்*?
*உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி (ஒருபோதும் நிகழாது) தூரமாகி விட்டது; வெகுதூரமாகி விட்டது*. இது, நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறில்லை. மரணிக்கிறோம்; உயிரோடும் இருக்கிறோம். *நாம் (உயிர்ப்பித்து) எழுப்பப்பட மாட்டோம்*. இவர் *அல்லாஹ்வின்மீது பொய்யை இட்டுக்கட்டும் மனிதரைத் தவிர வேறில்லை. நாங்கள் இவரை நம்பப் போவதில்லை* (என்றும் கூறினர்.) -23 : 36,37,38
_______________________________
5 ) *உலக வாழ்க்கையைப் பற்றி என்ன கூறினார்கள்?*
இது, நமது *இவ்வுலக வாழ்வைத் தவிர வேறில்லை. மரணிக்கிறோம்; உயிரோடும் இருக்கிறோம். நாம் (உயிர்ப்பித்து) எழுப்பப்பட மாட்டோம்*. (23:37)
6 ) *இவ்வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன?*
a) *எந்த ஒரு சமுதாயத்திற்கும் தூதர் வராமல் இல்லை.*
b) *எல்லா தூதர்களும் ஓர் இறையாகிய ஏகத்துவத்தையும் மறுமை வாழ்வையும் அச்சமூட்டி எச்சரித்துள்ளனர்*.
c) *எல்லா சமுதாயமும் இறை தூதர்களை மனிதர் தானே என ஏளனத்துடனும் பொய்யர் எனவும் வசைபாடி நம்ப மறுத்துள்ளனர்*.
d) *தூதர்கள் அல்லாஹ்விடம் மரியாதையையும் சமுதாயத்திடமிருந்து பாதுகாப்பு வேண்டியும் பிரார்தனை செய்துள்ளனர்*.
e) *அல்லாஹ் இறைமறுப்பாளர்களுக்கு தண்டனை வழங்கி அளித்துள்ளான்*.
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*