அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 182* ||
அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள், வசனங்கள் (11~10) வரை
_______________________________
1 ) *பூமியில் எடுக்கப்பட்ட அளவின்படி ஆதமின் மக்கள்* எவ்வாறு இருந்தனர்?
பூமியில் எடுக்கப்பட்ட அளவின்படி ஆதமின் மக்கள் *பல்வேறு நிறத்திலும் குணத்திலும்* இருந்தனர்..
(a) *நிறங்கள்*:
*சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் இடைப்பட்ட நிறங்கள்* (23:12)
(b) *குணங்கள்*:
*மென்மையானவர்கள், கடும்போக்குள்ளவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள்* (திர்மிதீ 2879)
_______________________________
2 ) *அல்லாஹ் மனிதனை எப்படி படைத்தான்* என்று விவரிக்கின்றான்?
அல்லாஹ் மனிதனை *படிப்படியாக படைத்தான்:*
(a) முதலில் *களிமண்ணிலிருந்து* (23:12)
(b) பின்னர் *விந்துத்துளியாக பாதுகாப்பான இடத்தில்* வைத்தான் (23:13)
(c) பின்னர் *கருமுட்டையாக மாற்றினான்* (23:14)
(d) பின்னர் *சதைத்துண்டாக மாற்றினான்* (23:14)
(e) பின்னர் *எலும்புகளாக உருவாக்கினான்* (23:14)
(f) *எலும்புகளுக்கு இறைச்சியை போர்த்தினான்* (23:14)
(g) இறுதியில் *வேறொரு படைப்பாக* தோற்றுவித்தான் (23:14)
_______________________________
3 ) எது *நற்பேறுமிக்க மரம்* ?
நற்பேறுமிக்க மரம் *ஸைத்தூன் (ஆலிவ்) * மரமாகும் (23:20).
இது *தூர் ஸீனாய் மலையில்* வளரும் மரமாகும், இது *எண்ணெயையும் உணவுக்கான குழம்பையும்* தருகிறது (திர்மிதீ 1774).
_______________________________