அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 181* ||
அத்தியாயம் 23 *அல் மூஃமினூன்* —இறை நம்பிக்கையாளர்கள் வசனங்கள் (01~10) வரை
1 ) சூரா அல்-முஃமினூனில் *வெற்றியாளர்கள்* என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்?
*இறைநம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) தாம் வெற்றியாளர்கள்*. அவர்களின் பண்புகள்:
– *தொழுகையில் பணிவு* (23:2)
– *வீண் பேச்சை தவிர்த்தல்* (23:3)
– *ஜகாத் கொடுத்தல்* (23:4)
– *கற்பைக் காத்தல்* (23:5-7)
– *அமானத்தைப் பேணுதல்* (23:8)
– *தொழுகைகளைக் கடைப்பிடித்தல்* (23:9)
*நிச்சயமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்* (23:1)
2 ) *முஃமின்களின் முதன்மையான பண்பு* என்ன?
தொழுகையில் *பணிவு* தான் முக்கிய பண்பு.
*அவர்கள் தங்கள் தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்* (23:2)
3 ) *நரகத்தில் செல்வோரின் சொர்க்க பங்கு என்ன ஆகும்?*
நரகத்தில் சேர்ந்தவரின் சொர்க்க பங்கு *சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கும்*.
“ஒருவருக்கு இரு வீடுகள் உண்டு. நரகத்தில் சென்றால், அவரது சொர்க்க வீடு மற்றவருக்கு சேரும்”
(இப்னு மாஜா 4332)
4 ) *சொர்க்கத்தின் உயர்ந்த படிநிலை எது*?
*ஃபிர்தவ்ஸ்* தான் சொர்க்கத்தின் *மிக உயர்ந்த படிநிலை*
“ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தின் உச்சம். அதன் மேல் அர்ஷ் (அருளாள(ன் இறைவ)னின் இருக்கை) உள்ளது” (புகாரி 7423)
“சொர்க்கத்தில் 100 படிநிலைகள் உண்டு. ஃபிர்தவ்ஸ் மிக உயர்ந்தது”
(புகாரி 2790)
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*