அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 179* ||
அத்தியாயம் 22 *அல்ஹஜ்* – ஹஜ் எனும் வணக்கம் வசனங்கள் 51~70 வரை
1 ) *அல்லாஹ் ஏன் ஷைத்தானின் குழப்பங்களை அனுமதிக்கிறான்?*
அல்லாஹ் ஷைத்தானின் குழப்பங்களை அனுமதிப்பது *மனிதர்களைச் சோதிப்பதற்காகவே*.
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் மற்றும் கடினமான உள்ளம் கொண்டவர்களைச் சோதிப்பதற்காக இது அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் *அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்தி, ஷைத்தானின் குழப்பங்களை நீக்குகிறான்*. (22:53)
2 ) *இறைநம்பிக்கையற்றவர்கள் எதுவரை சந்தேகத்தில் இருப்பார்கள்?*
இறைமறுப்பாளர்கள் உலகம் அழியும் நேரம் திடீரென வரும் வரை அல்லது *கடினமான நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை* இவ்வேதத்தில் சந்தேகத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள். (22:55)
3 ) *ஊரைவிட்டு வெளியேறி, தம் ஈமானைப் பாதுகாக்க சென்றவர்கள், யுத்தத்தில் கொல்லப்பட்டால் அல்லது இறந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்?*
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து, பின்னர் கொல்லப்படுபவர்களுக்கோ அல்லது இறந்து விடுபவர்களுக்கோ *அல்லாஹ் அழகான உணவை (ரிஸ்க்) வழங்குவான். அவர்கள் விரும்பும் இடத்தில் (சொர்க்கத்தில்) அவர்களை நுழையச் செய்வான்*. (22:58-59)
4 ) மழையை இறக்கும்போது பூமி எப்படி மாறுகிறது?
மழையை அல்லாஹ் பொழிவிக்கும்போது *பூமி பசுமையாகி, உயிர்ப்புடன் மாறுகிறது* 22:63
5 ) அல்லாஹ் கடலை மற்றும் வானத்தை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்?
அல்லாஹ் கடலில் செல்லும் *கப்பல்களை தன் கட்டளையால் வசப்படுத்தியுள்ளான்; வானம் பூமியின்மீது விழாதவாறு தன் ஆணையால் தடுத்து வைத்துள்ளான்* (22:65)
6) எதை வைத்து வாதிக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஒவ்வொரு சமுதாயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட *வழிபாட்டு முறைகள் குறித்து தர்க்கிக்க வேண்டாம்* என்று அல்லாஹ் கூறுகிறான் (22:67)
_______________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*