அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 178* ||
அத்தியாயம் 22 *அல்ஹஜ்* – ஹஜ் எனும் வணக்கம் வசனங்கள் 31~50 வரை
1 ) *இணை வைப்பவருக்கு* என்ன தண்டனை கிடைக்கும் ?
அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் *வானத்திலிருந்து விழுந்து, அவனைப் பறவைகள் கொத்திச் சென்றவனைப்* போலாவான். அல்லது (பெரும்) *காற்றால் தொலைதூரத்தில் தூக்கி எறியப்பட்டவனைப்* போலாவான். ( 22:31)
2 ) *ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நியமிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு நடைமுறை* என்ன?
*அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள்மீது அவன் பெயரைக் கூறுவதற்காகக் *குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நியமிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு நடைமுறை . ஆகும்*
.(22:34)
3 ) வசனம் (22:31) ல் *இணைவைப்பவனுக்குரிய எடுத்துக்காட்டும், நபியின் விளக்கமும்* என்ன ?
*கெட்டவனின் ஆன்மா) இறுதி வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவனுக்காகக் கதவைத் திறக்குமாறு கேட்கப்படும்*.
ஆனால் *அவனுக்குக் கதவு திறக்கப்பட மாட்டாது*.
அப்போது *நபி (ஸல்) அவர்கள் “வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது*.
*ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்*” என்ற (7:40) வசனத்தை ஓதினார்கள்.
அவனுடைய பதிவை பூமியின் கீழ்பகுதியில் உள்ள *ஸிஜ்ஜீன்* என்ற ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் சொல்லுவான்.
அவனுடைய ரூஹ் எறியப்படும். பின்னர் “அல்லாஹ்வுக்கு இணை வைப்பவன் வானத்திலிருந்து விழுந்து, அவனைப் பறவைகள் கொத்திச் சென்றவனைப் போலாவான். அல்லது (பெரும்) காற்றால் தொலைதூரத்தில் தூக்கி எறியப்பட்டவனைப் போலாவான்” என்ற (22:31) வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி), நூல்: அஹ்மத் (17803)
4 ) *நம்பிக்கையாளர்கள் உலகில் அதிகாரம் பெற்றால்* அவர்கள் என்ன செய்வார்கள்?
நம்பிக்கையாளர்கள் அதிகாரம் பெற்றால் *தொழுகையை நிலைநிறுத்துவார்கள், ஸகாத் கொடுப்பார்கள், நன்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள்* (22:41).
5 ) *அல்லாஹ்வின் தண்டனைப் பெற்ற நகரங்கள்* எப்படி இருந்தன?
அநியாயம் செய்த நகரங்கள் *அழிக்கப்பட்டு, அவை அடியோடு வீழ்ந்து கிடக்கின்றன; பாழடைந்த கிணறுகளும் உறுதியான கோட்டைகளும் கேட்பாரற்று* உள்ளன (22:45).
6 ) *அல்லாஹ்வின் கால அளவுக்கு ஒப்பாக மனிதனுடைய கால அளவு* என்ன?
அல்லாஹ்விடம் ஒரு நாள், மனிதர்கள் கணக்கிடும் *ஆயிரம் ஆண்டுகளைப்* போன்றது (22:47).
7 ) *முந்தைய சமூகங்களில் அநியாயம் செய்தவர்கள்* யார்?
*நூஹ், ஆது, ஸமூது, இப்ராஹீம், லூத், மத்யன் சமுதாயத்தினர் மற்றும் மூஸாவைப் பொய்யரெனக் கூறியவர்கள்* (22:42-44).
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*