அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 177* ||

அத்தியாயம் 22 *அல்ஹஜ்* – ஹஜ் எனும் வணக்கம் வசனங்கள் 11~30 வரை

1 ) *ஸயீத் பின் ஜுபைர்* (ரலி) அறிவித்த செய்தி…

மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்கும் சிலர், தங்கள் மனைவியர் ஆண் குழந்தைகள் பெற்றாலோ, குதிரைகள் குட்டி ஈன்றாலோ, “*இஸ்லாம் நல்ல மார்க்கம்*” என்பர்.

ஆனால், அவை நிகழாவிட்டால், “*இது கெட்ட மார்க்கம்*” எனக் கூறுவர். இவர்கள் தொடர்பாக (22:11) இறைவசனம் அருளப்பட்டது. (புகாரி 4742)

2 ) *யார் கெட்ட நண்பன் என்று அல்லாஹ் கூறுகிறான்?*

*யாருடைய தீமை நன்மையைவிட நெருக்கமாக இருக்கிறதோ*, அவனை அழைப்பவன் கெட்ட பாதுகாவலனும், கெட்ட நண்பனுமாவான். (22:13)

3) “*இவர்களே தமது இறைவனைப் பற்றித் தர்க்கித்த இரு பிரிவினராவர்*” (22:19) என்ற வசனம் எதைக் குறிக்கிறது?

இவ்வசனம் பத்ருப் போரில் முஸ்லிம்களான *ஹம்ஸா, அலீ, உபைதா பின் ஹாரிஸ்*  (ரலி) மற்றும் *இறைமறுப்பாளர்களான உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா* ஆகியோர் தொடர்பாக அருளப்பட்டது.

(புகாரி 3969, முஸ்லிம் 5771)

கேள்வி -21

நேற்று கேட்க்கப்பட்ட கேள்விக்கான பதில்கள்

4 ) *இம்மையில் ஆண்கள் பட்டாடை ஏன் அணியக்கூடாது*?


ஆண்கள் இம்மையில் பட்டாடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் *இவ்வுலகில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதை அணிய மாட்டார்*

(புஹாரி 5834, முஸ்லிம் 4202).

5 ) *பயணம் செய்வதற்கு சிறந்த இடம்* எது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?


நபி (ஸல்) அவர்கள், பயணத்திற்கு சிறந்த இடங்கள் *தமது பள்ளிவாசல் (மஸ்ஜிதுன் நபவி) மற்றும் பைத்துல் அதீக் (கஅபத்துல்லாஹ்)* என்று கூறினார்கள்

(அஹ்மத் 14255, இப்னு ஹிப்பான் 1616, நஸாயீ-குப்ரா 11284, முஸ்னத் அபீ யஃலா 2266).

6)   *எதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்* என்று அல்லாஹ் கூறுகிறான்?


அல்லாஹ், *சிலைகளின் அசுத்தத்தையும் பொய்ப் பேச்சுகளையும் விட்டு விலகிக் கொள்ளுமாறு* கூறுகிறான் (22:30).

7 ) *உளு செய்தால் மறுமையில் கிடைக்கும் பலன் என்ன?*

உளு செய்வதற்கான பலனாக, *மறுமையில் இறைநம்பிக்கையாளர்களின் உறுப்புகளில் உளூவின் நீர் பட்ட இடங்களில் நகைகள் அணிவிக்கப்படும்* (22:23).

(முஸ்லிம் 420, நஸாயீ 149, அஹ்மத் 6869).

___________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *