அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 175* ||
அத்தியாயம் 21 *அல் அன்பியா-நபிமார்கள்* (வசனங்கள் 91- 112வரை)
1 ) மரியம் (அலை) அவர்களின் சிறப்பு…
அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார் (21:91)
அல்லாஹ் அவரிடம் தன் உயிரிலிருந்து ஊதினான் (21:91)
அவரையும் அவரது மகனையும் (ஈசாவையும்) அகிலத்தாருக்கு ஒரு சான்றாக ஆக்கினான் (21:91)
2 ) யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் பற்றி…
யுக முடிவின் அடையாளமாக அவர்கள் ஒவ்வொரு மேட்டுப்பகுதியிலிருந்தும் விரைந்து வருவார்கள் (21:96)
துல்கர்னைன் அவர்களுக்கு எதிராக ஒரு தடுப்புச்சுவரை எழுப்பினார் (18:94-98)
நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வருகை ஒரு தீமையாக குறிப்பிட்டார்கள் (புகாரி 3346, முஸ்லிம் 5520)
யுக முடிவின் பத்து அடையாளங்களில் அவர்களும் ஒன்று (முஸ்லிம் 5559)
அவர்கள் தபரிய்யா ஏரியின் நீரை குடித்து விடுவார்கள் (முஸ்லிம் 5629)
3 ) அழிக்கப்பட்ட கிராமத்தின் மக்கள் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப முடியுமா?
*முடியாது*. எந்த ஊரை அல்லாஹ் அழித்து விட்டானோ, அவர்கள் இவ்வுலகிற்குத் திரும்பி வர மாட்டார்கள் என தடை விதிக்கப்பட்டுள்ளது (21:95)
4 ) *உலகத்தின் முடிவு எப்படி வரும்?*
*அல்லாஹ் வானத்தை படைப்பை தொடங்கியது போலவே சுருட்டுவதன் மூலம் மீட்டெடுப்பான்* (21:104)
மக்கள் காலணியில்லாதவர்களாக, நிர்வாணமாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக எழுப்பப்படுவார்கள் (புகாரி 3447, முஸ்லிம் 5493)
முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் (புகாரி 3447, முஸ்லிம் 5493)
5 ) *யார் இறுதியில் பூமியை உரிமையாகப் பெறுவார்கள்?**
*அல்லாஹ்வின் நல்லடியார்கள் பூமிக்கு வாரிசாவார்கள்* என்று ஸபூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (21:105)
6) *நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன?*
قَـٰلَ رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَـٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ⭘
என் இறைவனே! உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக!” என்றும், “நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பதற்கு எதிராக அளவிலா அருளாளனாகிய எங்கள் இறைவனே உதவி தேடப்படுபவன்” என்றும் (இறைத்தூதர்) கூறினார். (21:112)