அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 172* ||
அத்தியாயம் 21 *அல் அன்பியா-நபிமார்கள்* (வசனங்கள் 31 – 50 வரை)
1 ) அல்லாஹ் எதை *கூரையாக ஆக்கினான்*?
*வானத்தை* அல்லாஹ் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினான். (21: 32)
2) كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ (குல்லு நஃப்சுன் தா(z)யிக்கத்துல் மொவ்த்)
தமிழாக்கம்:
*ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே*. (21: 35)
3 ) எப்போது *அந்நியாயக்காரர்கள் உண்மை உணர்வார்கள்*?
இறைமறுப்பாளர்கள் *தமது முகங்களையும் முதுகுகளையும் நரகத்தின் நெருப்பை விட்டும் தடுத்துக் கொள்ள முடியாத மற்றும் உதவி செய்யப்படாத நேரத்தில்* உண்மையை உணர்வார்கள்* (21: 39)
4 ) *சப்தமிட்டு அழுதவராக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றவரின் (அகன்றவரின்) செய்தி* என்ன?
சப்தமிட்டு அழுதவராக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றவரின் (அகன்றவர்), *தனது அடிமைகளைத் தண்டித்தது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டவர்* ஆவார்.
நபி (ஸல்) அவர்கள், அவரது தண்டனை அடிமைகளின் தவறுகளுக்கு ஏற்ப இருந்தால் சமமாகிவிடும், குறைவாக இருந்தால் நன்மையாக அமையும், *அதிகமாக இருந்தால் அதற்கு தண்டிக்கப்படுவார்* என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு *அவர் மறுமையின் நியாயத்தை உணர்ந்து (21:47) வசனத்தை நபி (ஸல்) ஓதியபோது, அழுதவராக இடத்தை விட்டு விலகிச் சென்றார் (அகன்றார்)*.
பின்னர், *தனது அடிமைகளை விடுதலை செய்தார்*,
இவை மறுமையில் *நியாயமான விசாரணையின் முக்கியத்துவத்தையும், அநியாயம் செய்யப்படாது* என்பதையும் அறிய முடிகிறது.
குறிப்பு: (அத்தியாயம் 21:47), (திர்மிதீ: 3089, அஹ்மத்: 25197).
5 ) அல்லாஹ் எதை *மூஸா நபிக்கும், ஹாரூன் நபிக்கும் வழங்கினான்*?
அல்லாஹ் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் உண்மை மற்றும் பொய்யைப் பிரித்துக் காட்டக் கூடிய (*தவ்ராத்*), ஒளி, மற்றும் இறையச்சமுடையோருக்கான *அறிவுரையை* வழங்கினான்.
(*உண்மை, பொய்யைப் பிரித்துக் காட்டக் கூடியது,*
*ஒளி, இறையச்சமுடையோருக்கான அறிவுரை*) (21:48).
6 ) *நல்லவர்களின் பண்புகள்* எவை?
நல்லவர்கள் (இறையச்சமுடையோர்) *தமது இறைவனை மறைவாக இருக்கும்போதும் அஞ்சுவார்கள்* மற்றும் *உலகம் அழியும் நேரத்தைப் பற்றி பயப்படுவார்கள்*.
(*இறைவனை மறைவாக அஞ்சுதல், மறுமை நாளைப் பற்றி பயப்படுதல்*) (21:49).
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*