அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 151* ||

அத்தியாயம் 16

[ஸுரா *அந் நஹ்ல் -தேனீ* ) வசனம் 21- 50 வரை]

1 ) *இறைநம்பிக்கையாளர் செய்யும் நற்செயலுக்கும்

இறைமறுப்பாளர் செய்யும் நற்செயலுக்கும் உள்ள வேறுபாடு* என்ன?

*இறைநம்பிக்கையாள்ர் செய்யும் நற்செயலுக்கு கூலி இம்மையிலும் மறுமையிலும் வழங்கபடும்*

*இறை மறுப்பாளர்கள் நற்ச்செயலுக்கு இம்மையில் மட்டுமே கூலி வழங்கபடும்*

மறுமையில் எந்த. நன்மையும் இருக்காது     

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: முஸ்லிம் (5408), அஹ்மத் (11790)

2 ) *தமக்கு தாமே அநியாயம் செய்தவர்கள்* என அல்லாஹ் பாரை கூறுகிறான்?

*கர்வம் கொண்ட இறை மறுப்பாளர்கள்* ( தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்தவர்கள்) (16:29)

3 ) *நல்லோர்களின் ரூஹ் கைப்பற்றும்போது வானவர்கள்* என்ன கூறுவார்கள்?

*உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக சொர்க்கத்தில் நுழையுங்கள்!*  (16:32)

4 ) *அல்லாஹ்வின் நாட்டத்தால் தான் எப்படிப்பட்ட நிலையில் இருப்பதாக இணைவைப்போர்* கூறுகின்றனர்?

*அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி நாங்களும், எங்கள் முன்னோரும் எதையும் வணங்கியிருக்க மாட்டோம்*; எந்த ஒன்றையும் அவனன்றி தடை செய்திருக்க மாட்டோம்” (16:37)

5 ) *நபி(ஸல்) அவர்களின் பேராசை* என எதனை அல்லாஹ் கூறுகிறான்?

*மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதே* அவர்களின் பேராசையாக இருந்தது (16:37)

6 )அல்லாஹ் *كُن* -என்றால் என்ன நடக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?

*ஆகிவிடு*!” என்று அல்லாஹ் கூறினால் *உடனே அது ஆகிவிடும்* (16:40)

7 ) *அல்லாஹ் தீய செயல்களுக்காக  சூழ்ச்சி செய்வோரை* எவ்வாறு எல்லாம் தண்டனை வழங்குவேன் என கூறுகிறான்?

(i) *பூமியில் புதைத்துவிடுதல்*

(ii) *அவர்கள் அறியாத விதத்தில் தண்டனை*

(iii) *நடமாடிக் கொண்டிருக்கும்போதே பிடித்தல்*

(iv) *பயத்தில் இருக்கும்போதே பிடித்தல்* (16:45-47)

8 ) *ஹிஜ்ரத் செய்பர்களின் உயர்ந்த பண்புகள் என்ன? அவர்களுக்கு அல்லாஹ்வின் வெகுமதி என்ன?

பண்புகள்.:

பொறுமை கொள்பவர்கள்

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பவர்கள்

வெகுமதி:

இவ்வுலகில் அழகிய முறையில் குடியேற்றம்

மறுமையில் பெரிய கூலி (16:41-42)

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *