அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 138* ||

19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 21- 30 வரை.

1) *ஸலாமுன் அலைக்கும்* என யார்? எதற்க்காக கூறுவார்கள்?

*மலக்குமார்கள்*

வசனம் 20,21,22 ஆகியவற்றில் சொல்லபட்ட விசயங்களில் பொறுமையை மேற்கொண்டதால் அவர்களுக்கு ஸலாமுன் அலைக்கும் என மலக்குமார்கள் கூறுவார்கள் ( 13: 24)

2) *அல்லாஹ்வை திக்ரு செய்வதால் என்ன பயன் கிடைக்கிறது*?

*உள்ளங்கள் நிம்மதியடைகிறது* (13:28)

3) *உறவுகளை துண்டித்து வாழ்பவர்களுக்கு* என்ன ஏற்படும்?

அவர்களுக்கே *சாபம்* உள்ளது. அவர்களுக்கு மறுமையில் கேடு உள்ளது.(13:25)

*கூடுதல் தகவல்:*

நமக்கு நல்ல செல்வ செழிப்பு, நீண்ட ஆயுள் வேண்டும் என்றால் உறவை போண வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணிவாழட்டும்.*

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( புகாரி 5985)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *