அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 125* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 01- 10 வரை.

1) *யூஸுஃப் நபிக்கு அவரின் சகோதர்கள்* என்ன காரணத்திற்காக தீங்கிழைத்தார்கள்?

*தங்களைவிட யூஸுஃபும், அவரது சகோதரருமே நமது தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாக உள்ளார்களே* என்ற தவறான  எண்ணம் ( ஈகோ)தான்  காரணம்.

“நாம் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையிலும், *நம்மைவிட யூஸுஃபும், அவரது சகோதரருமே நமது தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாக இருந்தவயே*” (12:08)

2) யூஸுஃப் நபிக்கு எவைகள் தனக்கு பணிபவையாக கனவு கண்டார்?

( 11:4) *பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும்* கணவில் தனக்கு பணிபவையாகக் கண்டார்

3) இஸ்ஹாக் நபி யூஸுஃப் நபிக்கு என்ன உறவு முறை வேண்டும்?

*தந்தையின் தந்தை* – பாட்டனார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனே கண்ணியத்திற்குரியவர் ஆவார். அவர் (யாரெனில்), *இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூஸுஃப் (அலை) அவர்களேயாவார்.*

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (4688), அஹ்மத் (5454)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *