அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 116* ||

*அத்தியாயம் 11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 31- 40 வரை]

1) *நபி நூஹ் (அலை) அவர்களோடு இறை நம்பிக்கை கொண்ட மக்களை காப்பாற்ற* அல்லாஹ் செய்த ஏற்பாடு என்ன?

(11:37) “*நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் கப்பலைக் கட்டுவீராக*! அநியாயக்காரர்கள் தொடர்பாக என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்!”

விளக்கம்:

அல்லாஹ், நபி நூஹ் (அலை) அவர்களுக்கு *ஒரு பெரிய கப்பலைக் கட்டுமாறு உத்தரவிட்டான்*. கப்பலில் ஒவ்வொரு உயிரினத்தின் ஆண் மற்றும் பெண் ஜோடிகளையும், இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றுமாறு கூறினான். இதன் மூலம், வெள்ளத்திலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

2) தூதர்களின் *நல்லுபதேசம் ஏன் இறை மறுப்பாளர்களுக்கு பலன் தரவில்லை*?

    (11:34) *நான் உங்களுக்கு அறிவுரை கூற விரும்பினாலும், உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடி விட்டால் எனது அறிவுரை உங்களுக்குப் பயனளிக்காது*. அவன்தான் உங்கள் இறைவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.”

விளக்கம்:

*தூதர்கள் எவ்வளவு முயற்சித்தாலும், இறை மறுப்பாளர்கள் தங்கள் அகங்காரம் மற்றும் பிடிவாதத்தால் உண்மையை ஏற்க மறுத்தனர்*. அல்லாஹ் ஒருவரை வழிகேட்டில் விட்டுவிட்டால், எந்த அறிவுரையும் அவர்களுக்கு பயனளிக்காது.

3) *அச்சுறுத்தும் வேதனையை ஏற்படுத்த கூறிய இறை மறுப்பாளர்களை நோக்கி, நபி நூஹ் (அலை) அவர்கள்* என்ன கூறினார்கள்?

(11:33) “*அல்லாஹ் நாடினால் அதை உங்களிடம் அவன்தான் கொண்டு வருவான். நீங்கள் தப்பிப்போர் அல்ல*!”

(11:39) *“இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”*

விளக்கம்:

நூஹ் (அலை) அவர்கள் கூறியது:

*தண்டனை வரும் நேரத்தை தீர்மானிப்பது அல்லாஹ்வின் அதிகாரம். தாங்கள் அதை தடுக்க முடியாது*. மேலும், இறுதியில் யாருக்கு தண்டனை வரும் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

4) *மனிதனை அநியாயக்காரர்கள் ஒருவராக ஆக்கி விடக்கூடிய செயல்கள்* எது?

(11:31) “*உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கின்றனவோ*, அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் வழங்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறினால் *நான் அநியாயக்கார்களில் ஒருவனாகி விடுவேன்*.”

விளக்கம்:

மனிதனை அநியாயக்காரமாக ஆக்கும் செயல்களில் முக்கியமானவை:

• *பிறரை இழிவாக மதிப்பது*.

• *உண்மையை மறுத்து பொய்களை பரப்புவது*.

• *இறை தூதர்களின் வார்த்தைகளை கேலி செய்வது*.

• *அகங்காரம் மற்றும் பிடிவாதத்துடன் நடந்து கொள்வது*.

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *