அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 111* ||
*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 91- 100 வரை]*
1) *தூதர் எச்சரித்த வேதனை வரும் முன்னரே* அத்தூதரை ஏற்றுக்கொண்டு தண்டனிலிருந்து *தப்பித்த சமூகத்தார்* யார்?
(10:98) *யூனுஸ் நபியின் சமுதாயம்*. அவர்கள் இறைவனின் தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி இறைவனை ஏற்றுக்கொண்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்
2) ஃபிர்அவ்னின் *ஷஹாதா* அவனுக்கு பயன்தராது போனதன் காரணம் என்ன?
*இறைவனின் தண்டனை நேரத்தில் தான் நம்பியதால்*, அதற்கு முன்னர் அவன் மறுத்து குழப்பவாதியாக இருந்தது காரணமாகும் (10:91-92)
(4:18) *உயிர் பிரியும் நேரத்தில் மன்னிப்பு கேட்பதும், அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்பதும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது*
3) இறை நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் கரத்தில் என்பதை உரக்கச் சொல்லும் வசனம் எது?
(10:99) *உம் இறைவன் நாடியிருந்தால் பூமியில் இருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள்.*
(10:100) *அல்லாஹ்வின் நாட்டமின்றி யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது*”
________________________
Jazakallahu Haira جزاك اللهُ خيرًا