அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 107* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 51- 60 வரை]*

*1) அநியாயக்காரர்கள் மறுமையில் வேதனை செய்யப்படும் போது அவர்களிடம் என்ன கூறப்படும்?*

உங்கள் தூதர் உங்களுக்கு எச்சரித்த வேதனையை இப்போதுதான் நம்புகின்றீர்களா இதை தானே நீங்கள் அவசரமாக தேடிக் கொண்டிருந்தீர்கள் என்று சொல்லப்படும் (10:51).

நிலையான இவ்வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள் இதுவே நீங்கள் சம்பாதித்துக் தீமைகளுக்கான தண்டனை எனவும்  கூறப்படும் (10:52)

2) *அநியாயம் செய்த பாவிகள் மறுமையில் தங்கள் வேதனையில் இருந்து விடுவிக்க*, அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் எதையாவது கொடுத்து, அதிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சித்தால், அது அவர்களுக்கு பயன் தருமா?

(10:54) *பயன் தராது*

3) *அல்லாஹுவின் வார்த்தை நல்லடியார்களுக்கு* எவ்வாறு திகழ்கிறது?

(10:57,58) அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) *நல்லடியார்களுக்கு இதயங்களின் நோய்களை குணப்படுத்தி, அவர்களை நல்வழியில் வழிநடத்தும் அருட்கொடையாக* உள்ளது.

இது *ஏற்றுக்கொள்ளும் மனங்களுக்கு வழிகாட்டியாக, அவர்களது வாழ்வை இறைஉணர்வோடு இணைத்து*, நேர்மையாக வழிநடத்துகிறது.

குர்ஆன் அல்லாஹ்வின் அருளும், அவன் கருணையினாலும் வந்துள்ளது. எனவே, இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்,

மேலும் அவர்கள் *சேகரிக்கும் செல்வத்தைவிட குர்ஆன் மிக்க மேலானது*.

4) *உணவில் ஹராம் மற்றும் ஹலால் என்பதைச் தீர்மானிக்கும் அதிகாரம்*  மனிதர்களுக்கோ அல்லது தூதர்களுக்கோ உள்ளதா?

(10:59) *இல்லை*.

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *