இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர்கள் …

மறைக்கபட்ட உண்மை….தெரிந்தவை சில தெரியாதவை பல…

இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லீம்கள் சிறப்பு பங்காற்றியுள்ளனர். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்.

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்டனர். இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் ஒளரங்கசீப் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு வலிமை குன்றியது. இந்த வீழ்ச்சிதான் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமிக்க வழி செய்தது. இவர்களுக்கெதிராக நடைபெற்ற வீரம் செறிந்த போர்களில் முஸ்லிம்கள் பங்கு கொண்டனர்.

1. வரலாற்று நாயகன் திப்பு சுல்த்தான், போர்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் வெள்ளையர்களை நிலைகுழைத்து வெருண்டோட வைத்தவர் ஆனால் இன்று அவரை பற்றி யாராவது பேசினோமா இவர் தான் பாடுபட்டார் என்று..?

2. இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90% பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80% கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள் யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு, இது பச்சை துரோகம் இல்லையா?

3.முஸ்லிம் ஆட்சியாளர்கள் மார்க்க கடமை என்று ஃபத்வா கொடுத்தார்கள் ஆங்கிலேய படிப்பை துரக்க வேண்டும், அவர்களின் ஆடையை அனிய கூடாது என்று ! இது போன்று வேரு மதத்தவர்களில் எவேரேனும் உண்டா? இதனால் தான் இன்று கல்வியில் பின் தங்கியிருக்கிறது முஸ்லிம் சமுதாயம்!

4.முஸ்லிம் மன்னர்கள் பல நாடுகலாக பிரிந்து கிடந்த மாநிலங்கள், சிற்றூர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே மாநிலமாக தமிழகம் போன்றவற்றை மாற்றினார்களே இது பங்களிப்பு இல்லையா? 800 வருடமாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்களே இவற்றை மாற்றி காட்டினார்களே இது பங்களிப்பு இல்லையா?

5.முஸ்லிம் மன்னர்கள் பல வழக்குகளை தீர்ப்பதர்க்காக தனித்தனியே பஞ்சாயாத்து,மாவட்ட ஆட்சியகம், உயர் நீதி மன்றங்கள்,மாஜிஸ்தரேட் நீதி மன்றங்கள், போன்ற அமைப்பை உருவாக்கி இன்றும் வெற்றி காண்கின்றோமே இது பங்களிப்பு இல்லையா? இன்றும் புழக்கத்தில் உள்ள வகீல்,மாஜிஸ்தரேட்,வாயிதா,மாசூல், கஜானா ,ஆஜர், போன்ற அரபி வார்தைகளை தந்து உதவியாக இருக்கிறதே இதை மாற்ற முடிந்ததா?

6.தங்கம் ,வெள்ளி நாணயங்கள் புழகத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும் என்று ருபாய் நோட்டுகளை உபயொகபடுத்த அறிமுகபடுத்தியவர் மன்னர் முஹம்மது பின் துக்லக், மேலும் இவர் தான் நிலம் சம்பந்தமான வழக்குகளை தீர்க்க முதன் முதலில் சட்டம் இயற்றியவர், இவர் தான் தொல்லியல் துறையையும் நிருவி நாட்டுக்கு பெரிதும் இதை அர்ப்பனித்து உதவியவர்.

7.முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு பல காரணங்கள் அமைந்தாலும் மத ரீதியாக அமைந்த காரணம் உதுமானிய பேரரசால்(otomanempire) மத தலைமை மையமாக இயங்கிகொண்டிருந்த துருக்கியை ப்ரிடிஷ் அரசு கைபற்றியது,இதன்காரணமாக முஸ்லிம்கள் பொங்கி எழுந்து மேலும் இந்தியாவில் போராட்ட பங்களிப்பை வீரியப்படுத்தினர்.

8.நாட்டில் பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்த காலத்தில் யாருமே பிரச்சாரம் செய்ய முன் வராத நேரத்தில் ஜும்ஆ சொற்பொழிவை பிரச்சார களமாக மாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டு தள்ளப்பட்டு தமது பங்களிப்பை காட்டி தமது இன்னுயிரையும் தியாகம் செய்து ரத்த கறை இன்னும் காட்சியளிக்கும் கூனி மஸ்ஜித்(இரத்தக்கரை படிந்த பள்ளிவாசல்). இந்த படுகொலை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா? ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் நியாபகம் இருக்கும் .. இது முஸ்லிம்கலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

9.இந்திய தேசிய படையை(சுதேசி இயக்கம்) நாட்டிற்காக போராட உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் வாங்க நிதி வசூல் செய்யும் பொழுது இந்தியாவில் போதிய நிதி வசூல் செய்ய முடியாததால் பர்மா சென்று உதவி நாடிய பொழுது வள்ளல் ஹபீப் அன்றைய காலத்திலயே 1.5 கோடி நிதி கொடுத்து பெரிதும் உதவினார்,இவரை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா அல்லது சுதந்திர ஏட்டிலாவது குறிக்கபட்டு இருக்கிறதா? இது முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?

10.அன்று நேதாஜிக்கு தெரியும் முஸ்லிம்கள் தான் நாட்டிற்க்காக தியாக செய்ய முன்வந்து தம் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள் என்று அதனால் தான் நேதாஜியின் படையில் படை அனைத்திற்க்கும் தளபதியாக இருந்தவர் ஷா நவாஸ் கான், இவரது படையில் 90% முஸ்லிம்கள் , ரத்தம் சிந்தியது முஸ்லிம்! ரத்தம் சிந்தப்படுவதற்க்கு முஸ்லிம் ! பெயர் மட்டும் முஸ்லிம்களுக்குஇல்லை! இது தான் துரோகம்!

11.சுதந்திர இந்தியாவில் சுதந்திரதுக்கு முன் பாராளுமன்றத்தில் இருபது மந்திரிகளில் ஐந்து முஸ்லிம்கள் கரீம் கனி உட்பட ஆனால் இன்று? ஏன் இந்த துரோகம்?

12.நாட்டின் பல போராடங்களில் ஜனநாயக போராட்டம் மிக முக்கியமானது ரயில் எரிப்பு, கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகரகம் போன்றவை, இதற்கு காங்கிரஸ் மேலிடம் தான் தலைமையகம் இதன் பொருப்பு அன்றைய காலத்தில் சாதாரணமானது அல்ல, சுதந்திரம் வாங்கும் வரை இதன் பொருப்பு வகித்து தலைமைக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்.ஆனால் சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை யாரவது தலைமை பொருப்பில் உண்டா?

13.அன்று சுதேசி கம்பெனிக்கு 19 நபர் கொண்ட கமிட்டீக்கு பொது செயளாலராய் இருந்தவர் பக்கிர் முஹம்மது இராவுத்தர், துணை செயளாலராய் இருந்தவர் நம் அணைவருக்கும் தெரிந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், மேலும் கப்பல் வாங்குவதர்க்காக நிதி திரட்டப்பட்டது அப்பொழுது இந்தியா முழுவதும் திரட்டிய நிதி 215.13/- அனா மட்டுமே இந்த நிதி போதாது என்று இதற்காக பக்கிர் முஹம்மது இராவுத்தர் மட்டும் கொடுத்த பணம் அன்றே ஒரு லட்சம் ரூபாய்.

14.கப்பல் ஓட்டியதற்காக கைது செய்யபட்டு விட்டார் சிதம்பரம்,சிறை சென்றார் இவரை விடுவிப்பதர்க்காக வாய் மூச்சு கூட விட முடியாத காலத்தில் சிறைக்கு வெளியே போரட்டம் நடத்தபட்டது இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் போரட்ட களத்தில் முஹம்மது யாசீன் என்பவர் ஒருவர் மட்டுமே கொல்லபட்டார் இவரை பற்றி இந்தியாவில் யாருக்காவது இன்று தெரியுமா?

15.ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததில் வேலு நாச்சியாரும், மருது பாண்டியரும் ஒருவர் இவர்களுக்கு பாதிக்க பட்ட காலத்தில் தங்க அடைக்களம் கொடுத்து உயிரை காத்தவர் மன்னர் திப்பு சுல்தான்.

16.காந்தியின் கள்ளுக்கடை மறியல் முக்கியமானவை, இதில் பங்கேற்றால் மூன்று வருடம் சிறைதண்டனை மட்டும் அல்ல கடுங்காவல் சிறை தண்டனை இதை தெரிந்தும் மதுரை கோரிப்பாளையத்தில் 19 பேர் முன்வந்து போராட்டம் நடத்தினர் இதில் 10 பேர் முஸ்லிம்கள் .இதைக்கூட மறைத்து ஏன் இந்த துரோகம் முஸ்லிம் சமுதாயத்திற்கு?

17.அன்று நாட்டின் தேசிய கொடியை ஏந்தி சென்றால் சுடப்படுவார்கள் மேலும் 7 வருடம் சிறை தண்டனை அவ்வாரு கொடி ஏந்தி செல்வதும் சாதரண விஷயமும் அல்ல அவ்வாரு தைரியமுடன் செய்தவர் பட்டியலில் கொடி காத்த திருப்பூர் குமரன் மட்டுமே உள்ளார் , ஆனால் முஹைதீன் கான்,அப்துல் லத்தீப்,அப்துல்ரஹீம், மதுரை பாவா சாஹிபு, மதராசபட்டினம் ஷேக் சாஹிபு போன்ற பெயர்கள் மறைக்க பட்டு விட்டது ஏன் இந்த பச்சை துரோகம்?

18.போரட்ட சூட்டை தனிக்க ஆங்கிலேய அரசு புது யுக்தியை கையாண்டது அதில் ஒன்று பட்டம் அளிப்பது.. முஸ்லிம்களுக்கு சம்சுல் உலமா( உலமாக்களின் சூரியன்), கான் சாஹிப் பட்டம் மேலும் மற்ற மதத்தவர்களுக்கு ராவ் பஹதுர் ,சர் பட்டம்.. ஆனால் இந்த பட்டங்களை எல்லாம் துறந்து முழு எதிர்ப்பை காட்டியவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே மற்றவர்கள் இதை பயன்படுத்தி நாட்டிற்கு துரோகம் இழைத்து மேல் சென்று விட்டனர் இதனால் தான் இன்று படிப்பில் பின் தங்கிய நிலை இந்த முஸ்லீம் சமுதாயத்திற்க்கு.

19. பல முஸ்லிம்கள் சிறை வாசம் சென்று செத்து மடிந்தனர், ஆனால் சிறை சென்று செத்து மடிந்த முஸ்லிம்களின் பெயரை கூட நாட்டின் ஏட்டில் எழுத மணம் வரவில்லை!

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *