ரூஹ் பற்றிய இறைவசனம் இறங்குதல்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள் என்றார். மற்றவர், உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? ன்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்) என்றார்.

பின்னர், (அனைவரும் சேர்ந்து) அவரிடம் கேளுங்கள் என்றனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹை)ப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என அறிந்து கொண்டேன். ஆகவே, நான் எனது இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன்.

வேத அறிவிப்பு (வஹீ) இறங்கிய போது, அவர்கள், (நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையினால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது எனும் (17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.

(புகாரி 4721)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed