மனிதர்களில் சிறந்தவர்கள்–கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள்

இறைவழியில் உயிரை இழந்த தியாகியாக இருந்தாலும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால், அவர் சொர்க்கம் செல்ல இயலாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது. இதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எந்தளவிற்கு மிகப்பெரும் குற்றம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, நாம் பிறரிடம் பெற்றிருக்கும் கடனை அழகிய முறையில் திருப்பித் தருபவர்களாக இருக்க வேண்டும். நமக்கு உதவிய நல்லுள்ளம் கொண்டவர்களை ஏமாற்றாமல், அவர்களிடம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்தும் நாணயமான மக்களாக இருக்க வேண்டும். இந்தச் சிறப்புக்குரிய செயலை செய்பவர்கள், இறைவனின் பார்வையில் சிறந்தவர்கள் ஆவர்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்!” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள். அதை கொடுத்துவிடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-2390 , (2609)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed