மனிதர்களில் சிறந்தவர்கள்–பதவியை வெறுப்பவர்கள்

உலக இன்பங்கள் மனிதனை மார்க்கத்தை மறந்து வாழும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. அத்தகைய சுகபோகங்களுள் முக்கிய ஒன்றாக இருப்பது பதவி. பதவி சுகமும் அதை அடைவதற்காக இருக்கும் அளப்பறிய ஆசையும் மனிதர்களை மார்க்கத்தின் வரம்புகளை மீற வைக்கின்றன. நாலுபேராவது நமக்குக் கீழே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற பேராசை, அவர்களைப் பொறுப்பில் அல்லது பதவியில் அமரத் துடிக்க வைக்கிறது. நாளடைவில் அதற்காக அநியாயமான காரியங்களில் கூட சகஜமாக இறங்கிவிடுகிறார்கள். எனவே, பதவி மோகத்திற்கு அடிமையாகி விடாமல், அதற்காக அலைந்து திரிபவர்களாக இல்லாமல், தங்களது கடமைகளை சரிவர செய்யும் சிறந்தவர்களாக நாம் இருக்க வேண்டும்.

மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிமாக இதை வெறுப்பவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-3493

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed