மனிதர்களில் சிறந்தவர்கள்-மார்க்கத்திற்காகப் போராடுபவர்கள்

படைத்தவனின் மகத்தான கிருபையால் இந்த இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சத்திய நெறிமுறைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தூய எண்ணமும் அதற்குத் தோதுவான செயல்பாடுகளும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், சத்திய மார்க்கம் மேலோங்க செய்வதற்காக உளமாற உழைப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக தங்களிடம் இருக்கும் அனைத்தையும் அர்ப்பணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, இறைவனின் போதனைகளை பாதுகாப்பதற்கு போராடும், எட்டு திக்கும் பரப்புவதற்கு பாடுபடும் மக்கள், என்றும் சிறந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் பாதையில் தமது உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார்?” என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு, “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்  : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி-2786 , 3836

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed