மனிதர்களில் சிறந்தவர்கள்-நன்மை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்

மனிதகுலம் வாழ்வும் வளர்ச்சியும் பெறுவதற்குரிய நன்மையான காரியங்களை இஸ்லாம் தெளிவாகப் போதித்து இருக்கிறது. அதுபோன்று அதை இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தள்ளுக்கிற அனைத்து விதமான தீமைகளையும் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறது. இருப்பினும், அதிகமான மக்கள் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளைச் செய்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். நன்மையான செயல்களை மறந்தவர்களாக அல்லது அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறார்கள். ஆகையால், அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த சத்தியத்தின் அடிப்படையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இது இறைவனிடம் இருக்கும் சிறந்தவர்களின் பட்டியலில் நம்மை இடம் பெறச் செய்யும்.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

(திருக்குர்ஆன் 3:110)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed