இணக்கம் கருதி ஸலாம் சொல்பவர்கள்

நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் எதாதொரு விஷயத்திலும் எந்தவொரு மனஸ்தாபமும் வரவே வராது என்று எவராலும் உறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனிதர்கள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் குறைகளால் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் ஒருவருக்கொருவர் குரோதம் கொண்டு பழிவாங்கும் காரியங்களில் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். பல நாட்கள் பகைமை கொண்டு வழியில் முறைத்துக் கொள்கிறார்கள்; உறவை நட்பை முறித்துக் கொள்கிறார்கள். பல நாட்கள் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், தவறை மறந்து மன்னித்து முதலில் ஸலாம் சொல்பவர் சிறந்தவர் என்று மார்க்கம் கூறுகிறது.

ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட தன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் ஸலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல் : புகாரி-6077 , (6237)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed