மனிதர்களில் சிறந்தவர்கள்–குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர்கள்

மனிதர்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்கு அல்லாஹ்வினால் இறுதித் தூதராக நியமிக்கப்பட்டவர் மும்மது நபி (ஸல்) அவர்கள். அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற அற்புதங்களில் மிகவும் சிறந்தது, திருமறைக் குர்ஆன். இது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஒப்பற்ற வேதம். திருக்குர்ஆன் போதிக்காமல் மீதமாக விட்டிருக்கும் வழிகாட்டுதல் என்று ஏதுமில்லை. ஆன்மீகம், அரசியல், அறிவியல் என்று அது அனைத்துத் துறைகளைப் பற்றியும் பேசுகிறது. வழிகேடு எனும் இருந்து மீண்டு நேர்வழி பக்கம் பயணிப்பதற்கு ஒளிவீசும் கலங்கரையாக இருக்கும் குர்ஆனைக் கற்று, பிறருக்குக் கற்றுத்தரும் சிறந்த மக்களாக நாம் இருக்க வேண்டும்.

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), நூல் : புகாரி-5028

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed