கேள்வி : பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?

பதில்: பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?

பதில்: பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?

பதில்: சகிப்புத் தன்மை மிக்கவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன் 11:75)

கேள்வி : அனஸ் (ரலி) அவர்களை, நபிகளாருக்கு பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

பதில்: அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)

கேள்வி : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம் நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?

பதில் : உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா?
என்று கேட்டார்கள்.
(அல்குர்ஆன் 11:78)

கேள்வி : லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?

பதில்: சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது. (அல்குர்ஆன் 11:82)

கேள்வி : மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?

பதில் : பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)

கேள்வி : ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?

பதில்: உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?

பதில்: மத்யன் (அல்குர்ஆன் 11:84)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர் வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?

பதில் : அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)
———————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed