பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்:49:11.)

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வந்த நேரத்தில் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பட்டப்பெயர்கள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அவரது பட்டப்பெயர் கூறி அழைத்த போது “அல்லாஹ்வின் தூதரே! அவர் இதனை வெறுக்கிறார்” என்று கூறினோம். அப்போது, “பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம்” (49:11) வசனம் இறங்கியது.

இதை அபூ ஜபீரா என்பார் தனது சிறிய தந்தையான அன்சாரி நபித்தோழரிடமிருந்து அறிவிக்கின்றார்.

நூல்: அஹ்மத் (16045)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed