பச்சை குத்திக்கொள்ளக் கூடாது

    இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அழகிற்காக பற்களை செதுக்கிக் கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை மளித்து விட்டு விரும்பி வடிவில் செயற்கையாக புருவங்களை வைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.     

நபி (ஸல்) அவர்கள் அவர்கள்: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (5931)

விதவைப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளலாமா?

    கணவனை இழந்தை பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மாத்திரம் அலங்காரம் செய்யாமல் தவிர்த்துக்கொள் வேண்டும்.

அதற்குப் பிறகு அவர்கள் பூ வைத்துக்கொள்ளலாம். வண்ண ஆடைகளை உடுத்தலாம். தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பியவாறு தன்னை அலங்கரித்துக்கொள்ளலாம். 

ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் விதவைப் பெண்கள் அலங்கரிக்கக்கூடாது. வண்ண ஆடைகளை உடுத்தக் கூடாது என்றெல்லாம் பலவிதமான மூட நம்பிக்கைகள் நிலவுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் கொடுமையாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed