நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்களா?

இல்லை

ஈஸா நபி, மஹ்தீ ஆகியோர் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அது போல் நான்கு இமாம்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு உண்டா?

ஈசா (அலை) அவர்களும் மஹ்தீ அவர்களும் வருவார்கள். உலகத்தில் நல்லாட்சி புரிவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

ஆனால் இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹ்மது ஆகிய நான்கு பேர் குறித்து எந்த முன்னறிவிப்பையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

இமாம் அபூஹனீஃபாவை மேன்மைப்படுத்தி இமாம் ஷாஃபி அவர்களை இழிவுபடுத்தி மத்ஹப் வெறியர்கள் நபியின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள். இமாம்கள் தொடர்பாக இந்தப் பொய்யான செய்தியைத் தவிர ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed