நாணயம் பேணல்

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58)


நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!
(அல்குர்ஆன் 8:27)


ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேத முடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “”எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:75)


நயவஞ்சகனின் அடையாளம் மூன்று

1. பேசினால் பொய்பேசுவான்.

2. வாக்கு அளித்தால் மாறுசெய்வான்.

3. நம்பினால் மோசடி செய்வான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்வர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (33)


நயவஞ்சகனின் அடையாளம் மூன்று 1. பேசினால் பொய்பேசுவான். 2. வாக்கு அளித்தால் மாறுசெய்வான். 3. நம்பினால் மோசடி செய்வான் அவன் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் தன்மை ஒரு முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டாலும் சரியே! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்வர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் (90)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed