நரகத்தை விட்டும் காவல் தேடுதல்

எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர். இவர்களுக்கே தாங்கள் செய்தவற்றுக்கான கூலி உண்டு. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் 2:201, 202

நல்லடியார்களின் பண்புகளை பற்றி அல்லாஹ் சொல்லும் போது அவனுடைய வேதனையை அஞ்சுவார்கள் என்று குறிப்பிடுகின்றான்.

எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:64

மேற்கண்ட அத்தியாயத்தின் கடைசி வசனங்கள் ரஹ்மானுடைய அடியார்களின் பண்புகளைப் பட்டியலிடுகின்றன. அவற்றில், நரக வேதனையை விட்டுப் பாதுகாவல் தேடுவது உயரிய இடத்தைப் பிடிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரிடம், ‘தொழுகையில் நீ என்ன ஓதுகின்றாய்?’ என்று கேட்டார்கள் அதற்கு அவர், நான் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) ஓதுகின்றேன். பிறகு

اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار 

(அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஜன்னத்த வ அவூது பிக்க மினன்னார்)

அல்லாஹ்வே! உன்னிடம் நான் சுவனத்தைக் கேட்கின்றேன். நரகத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்என்று சொல்கின்றேன். ஆனால் நீங்களும் முஆதும் மெதுவாக ஓதுகின்ற வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லைஎன்று சொன்னார். அதேபோன்று தான் நானும் முஆதும் ஓதுகின்றோம்என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஒரு நபித்தோழர்

நூல்: அபூதாவூத் 792 793

இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடியதை தெளிவாகத் தெரிவிக்கின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed